பஞ்சாப் அணியால் தக்கவைக்கப்படுவாரா கே.எல் ராகுல் ? – பஞ்சாப் அணியின் ஓனர் நெஸ்வாடியா பேட்டி

Ness
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை சி.எஸ்.கே அணியானது கைப்பற்றி சாதனை படைத்தது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 தொடர்களில் ஐந்து முறை மும்பை அணியும், நான்கு முறை சிஎஸ்கே அணியும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டில் 15-ஆவது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் மேலும் 2 அணிகள் புதிதாக இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

Dhoni-3

- Advertisement -

அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்த அணிகளின் ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை மையமாக வைத்து 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விரைவில் அணி வீரர்களுக்கான ஏலமும் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்த வேலைகளை செய்து வருகிறது. அதன்படி பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக தொடர்வாரா ? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய ராகுல் 62 ரன்கள் சராசரியுடன் 626 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். இதில் ஆறு அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் ராகுல் பஞ்சாப் அணியில் தொடர்வாரா ? என்பது குறித்து பேசிய நெஸ்வாடியா கூறுகையில் : தற்போதைக்கு நாங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களை குறித்து ஆலோசித்து வருகிறோம்.

ராகுலை தக்கவைத்தால் மட்டும் போதாது அணியில் உள்ள 11 வீரர்களும் சிறப்பாக விளையாடினால் தான் வெற்றி பெற முடியும். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு கேரக்டர் உண்டு. எங்கள் அணியில் ராகுல் தக்கவைக்க படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரை தவிர்த்து மற்றவர்களையும் யோசிக்கவேண்டும். ஒரு வீரரை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : இப்போ இருக்குற டீம்ல அந்த 2 பேரை சேர்த்தா நமக்குத்தான் அது டேஞ்சர் – சுனில் கவாஸ்கர் கருத்து

ஒரு அணிக்கு 11 பேர் தேவை எனவே மீதமுள்ள நபர்களையும் நாங்கள் யோசித்து வருகிறோம். நிச்சயம் அடுத்த ஆண்டு சிறப்பான அணி அமையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. என்ன நடந்தாலும் தன்னம்பிக்கையோடு அதனை எதிர் கொள்வோம் என நெஸ்வாடியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement