சாம்சன், பண்ட், ராகுல் ஆகியோரில் 2024 டி20 உ.கோ வெல்லத் தேவையான கீப்பர் யார்? சித்து தேர்வு

Navjot Sidhu 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் வெளியாக உள்ளது. அதில் மற்ற இடங்களை காட்டிலும் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், இஷான் கிசான் போன்ற வீரர்கள் போட்டியிடுகின்றனர். எனவே அவர்களுக்கு மத்தியில் இந்தியாவுக்காக தேர்வாகப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இதில் இஷான் கிசான் மும்பை அணியில் தொடர்ந்து பெரிய ரன்கள் எடுக்காததால் இந்திய அணியில் கழற்றி விடப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. அதே போல 38 வயதில் பெங்களூரு அணியில் அசத்தும் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே 2022 டி20 உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் இம்முறை தேர்வுக்குழு நம்பி அவரை இந்தியாவுக்காக தேர்வு செய்வதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

- Advertisement -

சித்துவின் தேர்வு:
ஆனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக 9 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ள சஞ்சு சாம்சன் 385 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதேப் போல காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணியின் கேப்டனாக மிரட்டி வரும் ரிசப் பண்ட் 371 ரன்கள் குவித்து 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.

அத்துடன் லக்னோ அணியில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வரும் கே.எல். ராகுல் 9 போட்டிகளில் 378 ரன்கள் குவித்து தன்னுடைய தரத்தை காண்பித்து வருகிறார். எனவே இந்த 3 பேருக்கு உலகக் கோப்பை அணியில் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் தம்மை பொறுத்த வரை சஞ்சு சாம்சன் தான் இந்தியாவுக்காக விளையாடத் தகுதியான முதல் விக்கெட் கீப்பர் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நம்பர் 1 இடத்தில் சஞ்சு சாம்சன். ஏனெனில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவரிடம் இப்போது நல்ல வித்தியாசம் தெரிகிறது. அதே போல இந்தியாவுக்கு பேக்-அப் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அல்லது 4, 5வது இடத்தில் விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டால் கேஎல் ராகுலை தேர்ந்தெடுக்கலாம். அவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்”

இதையும் படிங்க: இனிமே என்கிட்ட எதுவும் கேட்காத.. மைதானத்தில் வைத்தே ருதுராஜுக்கு அட்வைஸ் கொடுத்த தோனி – பத்ரிநாத் பகிர்ந்த தகவல்

“ஆனால் நான் சாம்சனை முதலாவதாக தேர்ந்தெடுப்பேன். அவரைத் தொடர்ந்து ரிசப் பண்ட் இருப்பார். காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவரை நீங்கள் தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ஸ்பெசலிஸ்ட் வீரராக பார்க்கிறீர்களா? அவருடைய ஃபார்ம் சற்று தடுமாற்றமாக இருந்தாலும் சோதனைகளில் தேர்ச்சி பெற்று வருகிறார். எனவே இந்த 3 வீரர்களையும் நீங்கள் கணக்கில் வைக்கலாம். ஒருவேளை பிசிசிஐ தண்டனை கொடுக்காமல் போயிருந்தால் நான் இஷான் கிசானை தேர்வில் வைத்திருப்பேன்” என்று கூறினார்.

Advertisement