விராட் கோலியுடன் அந்த ஆர்சிபி வீரரும் ஸ்லெட்ஜிங் பண்ணாரு.. அதான் கம்பீர் சண்டை போட்டாரு.. நவீன்-உல்-ஹக்

Naveen Ul Haq
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் ஆகியோரிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்காமல் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதம் செய்தது பெரிய சர்ச்சையாக மாறியது.

இறுதியில் அந்த 3 பேருக்கும் ஐபிஎல் நிர்வாகம் போட்டி சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட அளவு அபராதமாக விதித்து தண்டனையும் கொடுத்தது. இந்நிலையில் கடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் லக்னோவுக்கு எதிராக கடைசி பந்தில் 1 ரன் அடித்த ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தரையில் தூக்கி அடித்து வெறித்தனமாக கொண்டாடினார்.

- Advertisement -

சண்டையின் பின்னணி:
அதை விரும்பாத காரணத்தாலேயே லக்னோவுக்கு வந்த போது விராட் கோலியுடன் சேர்ந்து கொண்டு முகமது சிராஜும் தம்மை ஸ்லட்ஜிங் செய்ததாக நவீன்-உல்-ஹக் கூறியுள்ளார். அப்படி அவர்கள் ஸ்லெட்ஜிங்கை துவங்கியதால் கௌதம் கம்பீர் கடைசியில் வந்து தமக்காக விராட் கோலியுடன் சண்டையிட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“நாங்கள் பெங்களூருவில் விளையாடிய போட்டியில் தான் அனைத்தும் துவங்கியது. அந்த நெருக்கமான போட்டியில் நாங்கள் வென்றோம். எங்களுடைய ஒரு வீரர் (ஆவேஷ் கான்) வெற்றி ரன்களை அடித்த மகிழ்ச்சியில் ஹெல்மெட்டை தூக்கி எரிந்து கொண்டாடினார். அனேகமாக விராட் கோலி அதை விரும்பவில்லை. பின்னர் அவர்கள் லக்னோவில் விளையாடுவதற்காக வந்தனர்”

- Advertisement -

“அப்போட்டியில் 9 அல்லது 10வது இடத்தில் நான் பேட்டிங் செய்தேன். கடைசியில் அப்போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். ஆனால் அப்போது நான் ஸ்லெட்ஜிங் செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர்கள் அவ்வாறு வம்பிழுக்கும் போது நாமும் விடக்கூடாது என்ற வகையில் நான் பதிலடி கொடுத்தேன். போட்டி முடிந்து இரு அணி வீரர்கள் கை கொடுக்கும் வரை அது நீடித்தது. அந்த ஸ்லெட்ஜிங் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய 2 பேரிடமிருந்து வந்தது”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : மும்பை அதுல வீக்.. அஸ்வின், சஹால் இருந்தும் ராஜஸ்தானுக்கு பிரச்சனை தான்.. ஆகாஷ் சோப்ரா

“அதனால் கம்பீர் சண்டையை தொடர்ந்தார். ஏனெனில் கடந்த போட்டியில் 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது பெங்களூரு அணியின் பவுலர் எங்களை மன்கட் முறையில் அவுட்டாக்க முயற்சித்தார். அப்படி செய்வது சரியல்ல. ஏனெனில் சிறப்பாக விளையாடிய அந்த போட்டி மன்கட் முறையில் அவுட்டாகி முடிந்தால் அது அவமானமாகும். அதனால் பெங்களூரு ரசிகர்களுக்கு கௌதம் கம்பீர் வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை கொடுத்தார். விராட் கோலியை போல அவரும் ஆக்ரோஷமானவர்” என்று கூறினார்.

Advertisement