ஐபிஎல் 2024 : மும்பை அதுல வீக்.. அஸ்வின், சஹால் இருந்தும் ராஜஸ்தானுக்கு பிரச்சனை தான்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 23
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் போட்டி போடுவதற்கு தயாராகி உள்ளன. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகத் திகழும் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

எனவே 2022இல் குஜராத்துக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்ததைப் போல தன்னை வளர்த்த மும்பை அணிக்கும் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இருப்பினும் மும்பை அணியில் தரமான சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மும்பை, ராஜஸ்தான் அலசல்:
இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பையிடம் அந்தளவுக்கு ஸ்பின்னர்கள் வலுவாக இல்லை. இங்கே நான் உண்மையான கருத்தை தெரிவிக்கிறேன். அவர்களிடம் பியூஸ் சாவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் இருக்கின்றனர். அதே போல சம்ஸ் முலானி போன்ற மேலும் சில இளம் வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய சுழல் பந்து வீச்சுக் கூட்டணி பலவீனமாகவே இருக்கிறது” என்று கூறினார்.

மறுபுறம் மும்பைக்கு நேர்மாறாக ரவிச்சந்திரன் அஸ்வின், சஹால், ஆடம் ஜாம்பா ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சுக் கூட்டணி வலுவாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஆனால் அந்த 3 ஸ்பின்னர்களையும் விளையாட வைப்பதில் ராஜஸ்தானுக்கு பிரச்சனை இருப்பதாக கூறும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ராஜஸ்தான் அணியை இந்த அலசலில் நீங்கள் தவிர்க்க முடியாது. அவர்களிடம் ரவிச்சந்திரன் அஸ்வின், சஹால் ஆகியோருடன் ஆடம் ஜாம்பாவும் உள்ளார். இந்த 3 பேரையும் ஒன்றாக விளையாட வைக்க முடியாது என்பதே அவர்களுடைய பிரச்சினையாகும். அதனால் அவர்கள் 3வது ஸ்பின்னரை தொடர்ந்து தேட வேண்டும். அதன் காரணமாகவே கடந்த முறை அவர்கள் முருகன் அஸ்வினை அதிகமாக விளையாட வைத்து ஜாம்பாவுக்கு குறைந்த வாய்ப்பு கொடுத்தனர்”

இதையும் படிங்க: ஜஸ்ட் 1 ரன் போதும்.. கோலியின் சாதனையை முறியடிக்கப்போகும் ஜெய்ஸ்வால் – மேலும் 2 சாதனைகள் படைக்கவும் வாய்ப்பு

“அவர்களிடம் இந்தியாவின் நம்பர் ஒன் மற்றும் நம்பர் 2 ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா உள்ளனர். ஆனால் வேடிக்கையான சில காரணங்களுக்காக ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானத்தில் சஹால் சுமாராக செயல்பட்டு வருவது அந்த அணிக்கு மற்றொரு பிரச்சினையாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல சஹால் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை என்பதும் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் ஜாம்பாவை விளையாட வைப்பதும் ராஜஸ்தானுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

Advertisement