ஐபிஎல் தொடரால் பயனில்ல.. வேணும்னா எங்ககிட்ட கத்துக்கோங்க.. முஸ்தபிசூர் பற்றி வங்கதேச நிர்வாகி கருத்து

Mustafizur Rahman
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது. அந்த வகையில் இம்முறை புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் ஓரளவு நன்றாக விளையாடும் சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னைக்காக விளையாடும் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் மே ஒன்றாம் தேதியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2024 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தங்களுடைய சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வங்கதேசம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. எனவே அதில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 30ஆம் தேதியுடன் நாடு திரும்புங்கள் என்று அவருக்கு வங்கதேச வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

- Advertisement -

எதுவும் பயனில்லை:
இருப்பினும் சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அவருக்கு மே ஒன்றாம் தேதி பஞ்சாப்புக்கு எதிராக நடைபெறும் ஒரு எக்ஸ்ட்ரா போட்டியில் விளையாடுவதற்கு மட்டும் வங்கதேச வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே விசா சம்பந்தமாக ஏற்கனவே அவர் ஒரு போட்டியில் விளையாடாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்தது. தற்போது 5 போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் முழு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மறுபுறம் ஜிம்பாப்பேவுக்கு எதிராக முஸ்தபிசூர் விளையாடி என்ன செய்யப் போகிறார்? ஐபிஎல் தொடரில் தோனி போன்ற மகத்தான வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை விட 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இருக்குமா? என்பதே சென்னை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ரஹ்மான் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என வங்கதேச வாரியத்தின் செயல்பாடுகள் தலைவர் ஜலால் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வேண்டுமானால் அவரிடமிருந்து மற்ற சிஎஸ்கே வீரர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கும் யூனிஸ் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முஸ்தபிசூரின் ஃபிட்னஸ் தான் எங்களுடைய கவலையாகும். அவர் 100% ஃபிட்டாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். சிஎஸ்கே அணிக்கு அவருடைய ஃபிட்னஸ் பற்றி எந்த கவலையும் கிடையாது. ஆனால் நாங்கள் கவலைப்பட வேண்டும்”

இதையும் படிங்க: இதே தோனி, கோலியா இருந்தா கொண்டாடிருப்பீங்க.. ரசிகர்கள் அவரையும் கொஞ்சம் பாராட்டணும்.. ஹர்பஜன் அதிருப்தி

“அதனால் தான் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக மட்டுமல்லாமல் அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவும் நாடு திரும்புமாறு கூறியுள்ளோம். ஆனால் ஐபிஎல் தொடரில் இருந்தால் அது நடக்காது. ஐபிஎல் தொடரில் விளையாடி அவர் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கற்றுக் கொள்ளும் காலங்கள் முடிந்து விட்டன. வேண்டுமானால் அவரிடமிருந்து ஐபிஎல் தொடரில் நிறைய வீரர்கள் கற்றுக் கொள்ளலாம். அதனால் வங்கதேசத்துக்கு எந்த பயனும் கிடையாது” என்று கூறினார்.

Advertisement