IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய சி.எஸ்.கே அணியின் இளம்வீரர் – மாற்றுவீரர் அறிவிப்பு

Mukesh
- Advertisement -

இந்த ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கி நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடரானது வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியாக இன்று இரவு ஏழு முப்பது (7:30) மணிக்கு அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக ஆரம்பிக்கப் போவது யார்? என்ற ஆவலுடன் ரசிகர்கள் இந்த போட்டியினை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு தீபக் சாகருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்றுவீரராக அணியில் இடம்பெற்று பிளேயிங் லெவனில் இருந்த முகேஷ் சவுத்ரி அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த வேளையில் இந்த ஆண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஏற்பட்டிருந்த காயம் காரணமாக தற்போது அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவரது விலகல் சென்னை அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : அதிரடியா செயல்பட ஓப்பனிங் வேண்டாம், அந்த இடத்துல விளையாடுங்க – ரோஹித்துக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்

அதேவேளையில் முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக மாற்று வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதையும் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement