CSK vs RR : பவுலிங் எல்லாம் நல்லா தான் இருந்துச்சி. ஆனா நாங்க தோக்க இதுதான் காரணம் – தோனி ஓபன்டாக்

MS Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டி ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

CSK vs RR

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணாமாக சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :

இந்த போட்டியில் அவர்கள் போதுமான ரன்களை விட சற்று அதிகமாக குவித்து விட்டார்கள். முதல் ஆறு ஓவர்களிலேயே நாங்கள் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டோம். இந்த மைதானத்தில் போதுமான ரன்களை விட நாங்கள் கூடுதலாகங்களை விட்டுக் கொடுத்ததே தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

என்னதான் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவர்களின் அவர்களது ரன் குவிப்பை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ராஜஸ்தான் அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படிங்க : IPL 2023 : இதே மாதிரி ரோஹித் சர்மா யூஸ் பண்ணா ட்ரெண்ட் போல்ட் மாதிரி வருவாரு – அர்ஜுன் டெண்டுல்கருக்கு முன்னாள் நியூசி வீரர் பாராட்டு

அதேபோன்று எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் நன்றாகத்தான் செயல்பட்டனர். இந்த மைதானத்தில் போதுமான ரன்களை விட அதிக ரன்கள் அவர்கள் குவித்து விட்டதே எங்களது தோல்விக்கு காரணமாக பார்ப்பதாக தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement