தோனி வரார் வாங்க. தோனி வரார் வாங்க கூச்சல் போட்டு மைதானத்துக்கு கூட்டம் சேர்க்கும் நிர்வாகிகள் – விவரம் இதோ

Dhoni-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அது தொடரை பாதிக்காது. ஏற்கனவே இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி உள்ளதால் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் தற்போது ராஞ்சி மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்த வேண்டுமா என்று பிசிசிஐ புலம்பும் அளவிற்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மொத்தம் 39 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட ரஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியை காண வெறும் 1,500 டிக்கெட்டுகளே இதுவரை விற்றுள்ளன. இதனால் ராஞ்சியில் போட்டி நடத்த ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்ற அளவிற்கு பிசிசிஐ புலம்பி வருகிறது.

இந்நிலையில் நாளைய போட்டியை நேரில் காண தோனி ராஞ்சி மைதானத்திற்கு வர உள்ளார். எனவே அதனை பயன்படுத்தி தற்போது மைதான நிர்வாகிகள் தோனி இந்த போட்டியை காண நேரில் வருவதால் ரசிகர்கள் போட்டியை காண வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். தோனி மைதானத்திற்கு வருவதற்கு காரணம் யாதெனில் தோனியின் சொந்தஊரில் போட்டி நடைபெறுவதால் தற்போது ஓய்வில் இருக்கும் தோனி நேரில் வர இருக்கிறார்.

Dhoni-1

மேலும் இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் மைதானத்திற்கு வந்து அவர் போட்டியை ரசிக்கவுள்ளார். இந்நிலையில் இதனை பயன்படுத்தியாவது டிக்கெட்டுகளை விற்று விட வேண்டும் அல்லது மைதானத்தை நிரப்ப வேண்டும் என்ற முடிவில் நிர்வாகிகள் இந்த விளம்பரத்தை தற்போது செய்து வருகின்றனர். தோனி வருகையால் நாளை மைதானத்தில் பெரிய அளவில் கூட்டம் வந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement