ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்களது 2வது வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் லக்னோ நிர்ணயம் செய்த 167 ரன்களை துரத்திய சென்னைக்கு ரச்சின் 37, சாய்க் ரசீத் 27 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் ஜடேஜா, விஜய் சங்கர் உள்ளிட்டவர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் தடுமாறிய சென்னைக்கு சிவம் துபே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி 43* ரன்கள் எடுத்தார். அவருடன் கேப்டன் தோனி அதிரடியாக 26* ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.3 ஓவரில் இலக்கை எட்டிய சென்னை தொடர்ச்சியாக சந்தித்த 5 தோல்விகளை நிறுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
மேஜிக் ரன் அவுட்:
முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் தலா 1 கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பதிரனா வீசிய 19வது ஓவரின் 2வது பந்தில் அப்துல் சமதை அவர் அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் அந்தப் பந்தை பக்கத்திலேயே அடித்த அப்துல் சமத் சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார்.
தோனி அதை எடுத்த நிலையில் அப்துல் சமத் அதை பார்க்காமலேயே ஓடினார். அதே சமயம் இவ்வளவு தூரம் அதுவும் சரியாக அடிக்கப் போகிறார் என்று நினைத்த அப்துல் சமத் கொஞ்சம் மெதுவாக தன்னுடைய வெள்ளைக் கோட்டை நெருங்கிக் கொண்டிருந்தார். அதற்கிடையே பந்தை பிடித்த தோனி ஒற்றைக் கையில் ஸ்டம்பை நோக்கி தூக்கி எறிந்தார்.
ஜஹீர் கான் வியப்பு:
கடைசியில் அது சமதை ரன் அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தது. இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு தோனி. “சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன். அது ஒன்று அடிக்கலாம் அல்லது தவறப்படலாம். அது போன்ற மனநிலையில் தான் பந்தை எறிந்தேன்” என்று சொன்னார்.
இதையும் படிங்க: 10 கோடி குடுக்குறனு சொன்னாங்க.. ஆனாலும் கே.கே.ஆர் அணியை விட்டு போக மனசில்ல – ரமன்தீப் சிங் நெகிழ்ச்சி
அதைக் அருகில் இருந்த கேட்ட லக்னோ ஆலோசர் ஜஹீர் கான் “அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?” என்ற வகையில் ஆச்சரியத்துடன் தோனி போல வெறுங்கை யை தூக்கி எறிந்து செய்துப் பார்த்தார். இறுதியில் ரிஷப் பண்ட் “நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினேன். அப்போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்” என தோனியிடம் ஜாலியாக கூறினார்.