2024 உலகக் கோப்பையில் நாட்டின் வெற்றிக்கு போராடிய ஷமிக்கு.. கௌரவ விருதை அறிவித்த இந்திய அரசு

Mohammed Shami 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் செமி ஃபைனலில் தோல்விகளை சந்திக்காத ஒரே அணியாக தொடர்ச்சியான 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர்.

இருப்பினும் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா வெற்றியை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இத்தொடரில் பாகிஸ்தானை தொடர்ந்து 8வது முறையாக தோற்கடித்தது, நியூசிலாந்தை செமி ஃபைனலில் முதல் முறையாக வீழ்த்தியது போன்ற மறக்க முடியாத வெற்றிகளையும் இந்தியா பதிவு செய்தது.

- Advertisement -

ஷமிக்கு விருது:
அதே போல இந்த உலகக் கோப்பையில் அசத்திய வீரர்களுக்கு மத்தியில் முகமது ஷமி வெளிப்படுத்திய செயல்பாடுகள் காலத்திற்கும் மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் கிடைத்த வாய்ப்பின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்தை 30 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் தோற்கடிக்க உதவினார்.

அதை தொடர்ந்து மும்பையில் இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 100 வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கும் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதை விட நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 7 விக்கெட்களை எடுத்த அவர் உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் போட்டியில் 7 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் மொத்தம் 24 விக்கெட்கள் எடுத்த அவர் ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள் மற்றும் ஒட்டுமொத்த உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் ஆகிய இரட்டை சரித்திர சாதனைகளையும் படைத்தார். அப்படி இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய முகமது ஷமிக்கு தற்போது அர்ஜுனா விருது கொடுக்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்காக 2023இல் பல்வேறு விளையாட்டுகளில் அசத்திய 25 வீரர்களில் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக ஷமிக்கு இந்த விருது கொடுக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 3வது ஒன்டே நடைபெறும் போலண்ட் பார்க் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இதை தொடர்ந்து வரும் ஜனவரி 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் ஷமி இந்த கௌரவ விருதை பெற உள்ளார். இந்த நிலையில் 2023 உலகக் கோப்பையிலேயே லேசான காயத்துடன் வெற்றிக்காக போராடிய அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் அடுத்து நடைபெறும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement