அப்ரிடி, ரவூப், நாசீம்ன்னு எத்தனை பேர் வந்தாலும் அவர் பாகிஸ்தானை சாய்ப்பாரு – நட்சத்திர வீரர் மீது முகமது கைப் உறுதி

Mohammed kaif
- Advertisement -

பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 2 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள போட்டிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் ஆசிய கோப்பையிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்துமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ள நிலையில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்களை செய்து தங்களை தங்களை அழித்துக் கொண்டு வரும் இந்தியாவை நன்கு செட்டிலாகியுள்ள பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சவால் விடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நசீம் ஆகிய 3 தரமான பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்று அந்நாட்டு ரசிகர்களும் சவால் விட்டு வருகின்றனர். இந்நிலையில் எத்தனை ஆகாய சூர பவுலர்கள் வந்தாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக நின்று இந்தியாவை காப்பாற்றி வெற்றி பெற வைப்பார் என்று நம்புவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவ காப்பாத்துவாரு:
குறிப்பாக சாதாரணமாகவே வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள விராட் கோலி 2022 டி20 உலகக்கோப்பையில் தனி ஒருவனாக வீழ்த்தியதை சுட்டிக்காட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அபாரமாக விளையாடினார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் என்று வரும் போது அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பொறுப்புடன் விளையாடும் அவர் சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபிக்கிறார்”

“2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்த ஃபார்முக்கு திரும்பிய அவர் அதே வேகத்தில் டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டார். அதற்கு முன் சுமாராக செயல்பட்ட அவர் ஆசியக் கோப்பையில் ஃபார்முக்கு திரும்பியது முதல் நிற்காமல் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த நினைவு நிச்சயமாக பாகிஸ்தான் பவுலர்கள் மனதில் இன்னும் இருக்கும். அதனால் விராட் கோலி எவ்வளவு முக்கியமான விக்கெட் என்பதை அவர்களும் அறிவார்கள்”

- Advertisement -

இதையும் படிங்க: அவங்கள தூக்குனா ஆட்டம் க்ளோஸ், மாலையில் அறிமுகமான பிளேயர்ஸை கொண்ட இந்தியாவ ஈஸியா பாக் தோற்கடிக்கும் – சல்மான் பட் மாஸ் பேட்டி

“எனவே அவரை அவுட்டாக்கினால் எளிதாக வென்று விடலாம் என்பது பாகிஸ்தான் பவுலர்களுக்கு நன்றாகத் தெரியும். அதே சமயம் நசீம் ஷா, ஹரிஷ் ரவூப், ஷாஹின் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் பவுலர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பதையும் அவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் விராட் கோலி நன்றாக அறிவார். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் விராட் கோலி அபாயகரமானவராக இருப்பார் என்று கூறினார்.

Advertisement