இந்த ரூல்ஸ் வேற லெவல்.. இப்போ தான் ஐபிஎல் நியாயமா நடக்குது.. பிசிசிஐக்கு ஸ்டார்க் பாராட்டு

Mitchell Starc
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் மும்பையை 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அதனால் 7வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா 12 வருடங்கள் கழித்து மும்பையை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது. மே மூன்றாம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மணிஷ் பாண்டே 42 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா, துசாரா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த மும்பை அணி திணறலாக பேட்டிங் செய்து 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

ஸ்டார்க் பாராட்டு:
இதையும் சேர்த்து 11வது தோல்வியை பதிவு செய்த மும்பை லீக் சுற்றுடன் வெளியேறுவதை 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்ஃபேக்ட் வீரர் விதிமுறை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் பவுலர்களுக்கு எதிராகவும் இருப்பதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதிமுறை சிவம் துபே, சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா விமர்சித்தார். இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் ஒரு போட்டியில் இரு அணிகளுக்கும் எக்ஸ்ட்ராவாக நியாயமான வாய்ப்பு கிடைப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். எனவே பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்த விதிமுறையை வரவேற்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இம்பேக்ட் விதிமுறை சில விஷயங்களை நியாயமாக மாற்றியுள்ளது. அதனால் ஒவ்வொரு அணிக்கும் பிளேயிங் லெவனில் ஆழமான பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை கிடைக்கிறது. அந்த விதிமுறையால் அதிக ஸ்கோர்கள் அடிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் அது பிட்ச்சின் தன்மை, மைதானத்தின் அளவு போன்றவற்றால் நடக்கிறது. அதில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நியாயத்துடன் விளையாடுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு 8 அல்லது 9வது இடத்தில் பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் கிடைக்கின்றனர்”

இதையும் படிங்க: இதனால தான் ரிங்கு செலக்ட்டாகல.. 2024 டி20 உ.கோ ஃபைனலில் மோதப்போகும் 2 அணிகள் இது தான்.. கங்குலி பேட்டி

“அதனால் பேட்டிங் வரிசை நீள்கிறது. பவர் பிளே ஓவர்களில் எந்த பயமும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஃஇன்பீல்டை தாண்டி ரன்கள் எடுத்தால் போதும். எனவே நல்ல பேட்டிங்கை கொண்டிருக்கும் நீங்கள் பெரிய ரன்கள் அடிப்பதற்கு விதிமுறை மட்டும் ஒரு பங்கை கொண்டிருக்கவில்லை. ஒரு மாதத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் அந்த விதிமுறை இருக்காது. எனவே அங்கே பெரிய ஸ்கோர்கள் பாதிக்கப்படுகிறதா என்பதை பார்ப்போம். அங்கே 11 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதால் கேப்டன்கள் கொஞ்சம் நுணுக்கமாக சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement