ஏற்கனவே டெல்லி டீம் இருக்குற நிலைமையில இது வேறயா? அடுத்த போட்டியில் இருந்து – விலகிய நட்சத்திர வீரர்

DC
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு போட்டியுமே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார் 22-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது தற்போது இரண்டாவது வார்த்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு பெற்றுள்ளது.

இவ்வேளையில் ஏப்ரல் 7-ஆம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் மூன்று முப்பது மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான மிகப்பெரிய போட்டி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாதால் இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள நான்கு போட்டியில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

அதனால் அந்த அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறி உள்ளது. ஏற்கனவே டெல்லி அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சாளர்களால் அந்த அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது மும்பை அணிக்கெதிரான போட்டிக்கு முன்னர் அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக நடைபெற்று முடிந்த போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் அடுத்த போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 148 ரன்ஸ்.. கோலியின் போராட்டத்தை வீணடித்த ஆர்சிபி.. ராஜஸ்தானுக்காக சதமடித்த ஜோஸ் பட்லர் அரிதான சாதனை

ஏற்கனவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணியானது தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வேளையில் தற்போது அந்த அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு விதத்திலும் கை கொடுக்கக்கூடிய வீரராக பார்க்கப்படும் மிட்சல் மார்ஷ் அடுத்த போட்டியில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement