அப்படில்லாம் ஒன்னுமில்ல.. 2023 உ.கோ மீது கால் போட்ட சர்ச்சை.. விமர்சனங்களுக்கு மார்ஷ் பதில்

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. குறிப்பாக ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன் பின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஃபைனலில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை பந்தாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 240 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. ஆனால் அதற்காக கொடுக்கப்பட்ட வெற்றிக்கோப்பை மீது நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கால் மீது கால் போட்டு கொண்டாடியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

- Advertisement -

சர்ச்சைக்கு பதில்:
குறிப்பாக முழு திறமையை வெளிப்படுத்தி கடினமாக போராடிய உழைப்பிற்கு கிடைத்த பரிசு மீது இப்படியா காலை போடுவீர்கள் என்று நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக தலை மீது வைத்து கொண்டாட வேண்டிய கோப்பையின் மீது நீங்கள் கால் போட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என இந்திய வீரர் முகமது ஷமி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அதே சமயம் இதற்கு முன் கால்பந்து ஆட்டத்தில் நிறைய ஜாம்பவான்கள் இதே போல கொண்டாடியதால் மிட்சேல் மார்ஷ் அப்படி செய்ததில் எந்த தவறுமில்லை என்று மற்றொரு தரப்பு ஆதரவும் தெரிவித்தது. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பது போலவும் அனைவரும் நினைப்பது போலவும் உலக கோப்பைக்கு அவமரியாதை செய்யும் எண்ணத்துடன் கால் போடவில்லை என்று மிட்சேல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே சமூக வலைதளங்களில் அனைவரும் சொல்வது போல் இந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த புகைப்படத்தில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை என்பது தெளிவாகிறது. நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. இந்த விவகாரத்தில் நான் செல்லவில்லை”

இதையும் படிங்க: இன்றைய 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

“ஏனெனில் நான் அதிகமாக சமூக வலைத்தளங்களை பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் எதுவுமே இல்லை” என்று கூறினார். இந்த நிலையில் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 1 வெற்றியும் பெற்று கோப்பையை வெல்வதற்கு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement