32 நாள் அவரு பட்ட கஷ்டத்தை பாத்து இருக்கேன்.. அதுக்கு அப்புறம் செம கம்பேக் குடுத்தாரு – மைக் ஹஸ்ஸி ஓபன்டாக்

Hussey
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஐந்து போட்டியில் மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது. இனிவரும் போட்டியிகளிலும் சென்னை அணியின் வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த கடினமான காலகட்டம் குறித்த சில முக்கிய தகவல்களை தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பதை நான் விரும்புகிறேன்.

- Advertisement -

முதல்முறையாக அவர் சிஎஸ்கே அணிக்கு வந்தபோதே அவரை பார்த்திருக்கிறேன். அப்போது இளம் வாலிபராக ஒல்லியான தேகத்துடன் இருந்தார். அதுமட்டும் இன்றி 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது துபாயில் நடைபெற்ற போது அவருக்கு கோவிட் வந்தது. அந்த நேரத்தில் 32 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதோடு தொடர்ச்சியாக அவருக்கு அடிக்கடி சோதனையையும் செய்யப்பட்டது. அந்த சோதனைகளில் பெரும்பாலும் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட்டே வந்ததால் மிகவும் சோர்ந்து போனார். அதன் பின்னர் 32 நாட்கள் கழித்து தான் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார். அந்த சமயத்தில் நான் அவரை வலைப்பயிற்சியில் பார்க்கும்போது அப்போதே அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

“இந்த பையனிடம் ஏதோ ஒன்று சிறப்பு இருக்கிறது” என்று நான் அப்போதே நினைத்தேன். அதன்பிறகு அந்த தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர் அதிக ரன்கள் அடிக்காததால் மீண்டும் அணியிலிருந்து வெளியேறினார். ஆனாலும் விடாப்பிடியாக தனது பேட்டிங் பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டு தனது திறனை மேம்படுத்திக் கொண்டு அவர் மீண்டும் எங்கள் அணிக்காக தற்போது நட்சத்திர வீரராக விளையாடி வருவதை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : இன்னைக்கு எதிர்க்கும் இதே ரசிகர்கள்.. சீக்கிரம் பாண்டியாவுக்காக அதை செய்வாங்க.. இஷான் கிசான் பேட்டி

கடந்த சில சீசன்களாகவே அவரது ஆட்டம் தனித்துவமான லெவலில் இருந்து வருவதாக ருதுராஜ் கெய்க்வாட்டினை பாராட்டினார். அவரிடம் இருந்த கேப்டன்சி திறனை கவனித்த தோனி அவரை கேப்டன் பொறுப்பிற்காக தயார் செய்து தற்போது கேப்டனாகவும் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement