IPL 2023 : தோனியின் ஓய்வு குறித்த முடிவு ஒருத்தருக்கு மட்டுமே தெரியும் – மைக்கல் ஹஸ்ஸி அளித்த பேட்டி

Hussey
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. அதன் பிறகு மே-28 ஆம் தேதி அகமதாபாத்தில் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்தே அனைவரது மத்தியிலும் பேசப்பட்டு வரும் விடயமாக இருப்பது தோனியின் ஓய்வு பற்றி தான்.

Dhoni

ஏனெனில் 41 வயதான தோனி இந்த சீசனில் கடைசியாக விளையாடுகிறார் என்பதனால் சிஎஸ்கே அணி இந்தியாவின் எந்த மூலையில் விளையாடினாலும் சென்னை அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு வருகின்றனர். அதேவேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் தோனியின் ஓய்வு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கல் ஹஸ்ஸி தோனியின் ஓய்வு குறித்த முக்கிய கருத்தினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தோனி அவரது ஓய்வு குறித்து யாரிடமும் பேசிக்கொள்வதே இல்லை. அவர் கடைசி சீசனில் விளையாடுகிறாரா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

Dhoni 1

ஆனால் இன்றளவும் தோனி சிக்ஸர் விளாசி போட்டிகளை முடித்துக் கொடுக்கிறார். அதுமட்டும் இன்றி பயிற்சியிலும் உத்வேகமாக ஈடுபடுகிறார். அவரால் இன்றளவும் சிக்ஸர்களை எளிதாக அடிக்க முடிகிறது. எனவே நிச்சயம் அவர் தொடர்ந்து விளையாடுமளவிற்கு தகுதியாகவே இருக்கிறார் என்று நான் கூறுவேன்.

- Advertisement -

மேலும் 5 ஆண்டுகள் கூட அவர் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் தோனியின் ஓய்வு முடிவு அவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் எப்போதுமே தனது திட்டத்தை வெளிப்படையாக வைத்திருப்பவர் தான் தோனி. தன்னுடைய முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது ரன் ஓட முடியாமல் சிரமப்படுகிறார்.

இதையும் படிங்க : RCB vs SRH : நான் செஞ்சுரி அடிப்பேன்னு போட்டிக்கு முன்னாடியே அவரு என்கிட்ட சொன்னாரு – விராட் கோலி பூரிப்பு

அதேவேளையில் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதை மட்டுமே அவர் திட்டமாக வைத்துள்ளார். தோனியின் ஓய்வு பற்றி தெரிந்த ஒரே ஒரு நபர் யார் என்றால் அது அவரே தான். அவர் சொன்னால் தான் நமக்கு எந்தவொரு முடிவும் தெரியும் என மைக்கல் ஹஸ்ஸி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement