பவுலிங் மட்டும் பிரச்சனையில்ல.. எவ்ளோ காசு கொடுத்தாலும் அதை செய்யலன்னா ஆர்சிபி ஜெயிக்காது.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan 6
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. அதனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 15ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த போட்டியில் வழக்கம் போல பந்து வீச்சில் சொதப்பிய அந்த அணி 287 ரன்களை வாரி வழங்கியது.

அதனால் விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 62, தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்தும் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் 267 ரன்கள் குவிக்கும் அளவுக்கு பெங்களூரு அணியின் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அந்த அணியின் படுமோசமான பவுலிங் தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

முக்கிய பிரச்சனை:
இந்நிலையில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டீ வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு பெங்களூரு நிர்வாகம் காலம் காலமாக கோடிகளை இறைத்து வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதனால் தரமான வீரர்களை குறைந்த விலையில் வாங்கும் யுக்தியை அந்த அணி எப்போதும் கடைபிடிப்பதில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

எனவே நட்சத்திர வீரர்களை பெரிய தொகைக்கு வாங்கினால் கோப்பையை வென்று விடலாம் என்ற பெங்களூருவின் கனவு பலிக்காது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை என்பது கிரிக்கெட் தனிநபர் விளையாட்டல்ல குழு விளையாட்டு என்பதை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. உங்களால் அனைத்து பெரிய வீரர்களையும் வாங்க முடியும்”

- Advertisement -

“ஆனால் அவர்களை ஒரு அணியில் போட்டால் வெற்றி பெற முடியும் என்று அர்த்தமல்ல. அது ஆர்சிபி அணியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், பஃப் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல் போன்ற நம்ப முடியாத வீரர்களை வாங்கினார்கள். இருப்பினும் அவர்கள் ஒவ்வொரு வீரர்களின் வேலையை தெளிவுபடுத்தி அசத்துவதற்கான வாய்ப்பை வழங்கினார்கள் என்று தெரியவில்லை”

இதையும் படிங்க: இன்னும் ஒரு தோல்வி வந்தா கூட எல்லாம் போச்சு.. மீண்டும் ஏமாற்றத்தை சந்திக்கவுள்ள – ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள்

“அவர்கள் வித்தியாசமாக எதையும் முயற்சித்ததாகவும் தெரியவில்லை. நம்முடைய அணியில் மகத்தான வீரர்கள் இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என்று அவர்கள் நினைப்பது போல் தெரிகிறது. ஆனால் மகத்தான வீரர்களை கொண்டிருந்தாலும் நீங்கள் அவர்களை ஒரே அணியின் கலாச்சாரத்தில் கொண்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு வீரர்களின் வேலையை தெளிவாக கண்டறிய வேண்டும். அதை செய்யாத வரை நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது” என்று கூறினார்.

Advertisement