எதிர்வரும் 50 ஓவர் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர ஆல்ரவுண்டர் – வெளியான உறுதி தகவல்

Bracewell
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்போது தயாராகி வரும் வேளையில் கடைசி இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

worldcup

- Advertisement -

இந்நிலையில் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக காயத்தினால் அவதிப்பட்டு வரும் சில வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் நிலவு வரும் வேளையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டரான மிச்சல் பிரேஸ்வெல் இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியிருக்கிறார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்த பிரேஸ்வெல் அங்கு நடைபெற்ற ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடிய போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார்.

Bracewell 1

அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கும் அவர் காயத்திலிருந்து மீண்டு வர சில மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூசி கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் : கடந்த 15 மாதங்களாக எங்களது அணிக்காக மூன்று வகையான துறையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பிரேஸ்வெல் இந்த உலகக் கோப்பை தொடரில் எங்கள் அணியுடன் இணைந்து விளையாட முடியாமல் போனது எங்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஒரு போட்டியில் தோற்றதால் குறைச்சு எடை போட்டு அவர டீம விட்டு தூக்க நினைக்காதீங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு கிளார்க் ஆதரவு

ஏற்கனவே நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற உறுதியான தகவல் இல்லாத வேளையில் தற்போது பிரேஸ்வெல் அணியில் இருந்து வெளியேறியுள்ளது அந்த அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.

Advertisement