இந்தமுறை 50 ஓவர் உலககோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் – மைக்கல் வாகன் கருத்து

Michael-Vaughan
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி-யின் 13-ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய கிரிக்கெட் தொடருக்காக தற்போதே ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

முதல் முறையாக முற்றிலுமாக இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரினை நடத்த பிசிசிஐ பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. உலகின் முன்னணி 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணிகள் குறித்த தங்களது கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் எதிர்வரும் இந்த 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கருத்தினை டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ஒரு விடயத்தை நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணியை யார் இந்த உலகக் கோப்பை தொடரில் வீழ்த்துகிறார்களோ அவர்களே இந்த உலகக் கோப்பை கைப்பற்றுவார்கள்.

- Advertisement -

ஏனெனில் தற்போது உள்ள இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய மைதானங்களில் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்தும் என்பது நாம் அறிந்ததே. அதோடு பந்துவீச்சும் தற்போது இந்திய அணியில் சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க : 35 வயசுலயே ரிட்டையராக அந்த இந்திய பவுலர் தான் காரணம்.. 2023 உ.கோ தொடரில் மிரட்டப்போகும் 4 பவுலர்களை பெயரிட்ட – பின்ச்

எனவே எதிர்வரும் உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தும் அணிதான் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement