அடுத்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி தக்கவைக்க இருக்கும் 4 வீரர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது.

IPL

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது அணியில் தக்கவைக்க வேண்டிய நான்கு வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தங்கள் அணியில் ஏலத்திற்கு முன்னர் தக்க வைக்க நினைக்கும் 4 வீரர்களை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

Ganguly-ipl

அதன்படி 15வது சீசனுக்கு முன் மும்பை அணியால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் பொல்லார்ட், முதன்மை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆகிய 4 வீரர்களை தக்க வைக்கப்படுவார்கள் என்று பல நிபுணர்கள் கணித்துள்ளனர்.

mi

இந்திய வீரர்களான ரோஹித், பும்ரா, பாண்டியா ஆகியோர் மும்பை அணிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து வருகின்றனர். அதேபோல் ஆரம்பத்தில் இருந்து மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி வீரரான பொல்லார்டை நிச்சயம் மும்பை அணி தக்கவைக்க நினைக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement