உதயமான புதிய நாயகன்.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் தோனி போன்ற யாருமே செய்யாத வரலாற்றுச் சாதனை

Mayank Yadav 7
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அதனால் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் சொந்த மண்ணில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு 9வது இடத்திற்கு சரிந்தது.

பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 181/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டீ காக் 81, நிக்கோலஸ் பூரான் 40* ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 182 ரன்களை துரத்திய பெங்களூரு சுமாராக விளையாடி 19.4 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

உதயமான நாயகன்:
விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு மஹிபால் லோம்ரர் 33 ரன்கள் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் அறிமுகமான 21 வயதாகும் மயங் யாதவ் ஆரம்பத்திலேயே 145 – 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அப்போட்டியில் ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அவர் 2024 ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் அந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து லக்னோவை வெற்றி பெற வைத்த அவர் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதனால் இந்தியா தங்களுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டறிந்து விட்டதாக பிரட் லீ போன்ற ஜாம்பவான்கள் அவரை பாராட்டினர்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இப்போட்டியிலும் 150 மீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசிய அவர் கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோரை அவுட்டாக்கினார். அத்துடன் 156.70 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்து வீசிய அவர் ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்தார். அதே வேகத்தில் மொத்தம் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் மீண்டும் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக ஆடுவதே என்னோட லட்சியம்.. 155 கி.மீ வேகத்துக்கு அந்த 3 விஷயம் ஹெல்ப் பண்ணுது.. மயங் பேட்டி

இதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் சரித்திரத்தை மயங் யாதவ் படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி, சுரேஷ் ரெய்னா போன்ற யாருமே தங்களுடைய முதல் 2 ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement