மற்ற அணிகளை எல்லாம் விட சி.எஸ்.கே ஒரு பெஸ்ட் டீம்.. அதுக்கு காரணம் இவங்க தான் – மேத்யூ ஹைடன் கருத்து

Hayden
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த 17-வது சீசனானது இந்த ஆண்டு கோடைகாலத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்னும் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில மாதங்கள் எஞ்சியுள்ள வேளையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேபோன்று தற்போதே இந்த ஐபிஎல் தொடர் குறித்தும், ஐபிஎல் அணிகள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஐபிஎல் அணிகளிலேயே மிகச் சிறந்த ரசிகர்களையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் கொண்ட அணி என்றால் அது சிஎஸ்கே தான் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :சென்னை அணியின் ரசிகர்கள் தோனியை அவர்களது ஹீரோவாக பார்க்கின்றனர்.

அதுமட்டும் இன்றி ஒட்டுமொத்தமாகவே கிரிக்கெட் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மும்பை அணி வீரர்களை கண்டறிந்து சூப்பர் ஸ்டாராக மாற்றும். அதே வேலையை தான் சென்னை அணியும் செய்து வருகிறது. அவர்களும் சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களது கரியரை முன்னேற்ற உதவுகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக சென்னை அணியின் ரசிகர்கள் ஆதரவு என்பது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஏனெனில் ஐபிஎல் தொடரின் போது சென்னை அணி இல்லாத போதும் தோனியை ஆதரிக்க அவர்கள் புனே வரை விசில் போடு ட்ரெயினில் வந்து ஆதரித்தனர். அந்த அளவிற்கு அவர்கள் சிஎஸ்கே அணியை ரசிகர்கள் நேசிக்கின்றனர்.

இதையும் படிங்க : விராட் கோலி அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தா அது கண்டிப்பா சரியானதான் இருக்கும் – ஏ.பி.டிவில்லியர்ஸ் கருத்து

தமிழ்நாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் விளையாடாத போதும் அந்த அணிக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவு என்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது. தோனியின் ஓய்வுக்கு பிறகும் அவரது புகழ் சென்னை அணியில் இருக்கும். அதே போன்று ரசிகர்களின் ஆதரவும் சென்னை அணிக்கு தொடரும் என்று ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement