இதை மட்டும் செஞ்சா பாண்டியாவின் 2024 டி20 உ.கோ இடம் துபேவுக்கு கிடைச்சுரும்.. மனோஜ் திவாரி ஓப்பன்டாக்

Manoj Tiwari 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய வீரர்கள் அடுத்ததாக நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது சிஎஸ்கே அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடும் சிவம் துபே இதுவரை 5 போட்டியில் 176* ரன்களை 160 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்த அவர் இம்முறையும் சிக்ஸர்களை பறக்க விட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

திவாரி அட்வைஸ்:
அதனால் அவரை டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என்று யுவராஜ் சிங், வீரந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பேட்டிங்கில் மிரட்டும் துபே பந்து வீச்சிலும் அசத்தினால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட பிரகாச வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை துபே உலகக் கோப்பையில் தேர்வாகாமல் போனால் அதற்கு பவுலிங் வாய்ப்பு வழங்காத சிஎஸ்கே அணி தான் காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஆல் ரவுண்டராக விளையாட வேண்டுமெனில் பாண்டியா பந்து வீச வேண்டும். ஏனெனில் 11 என்ற எக்கனாமியில் பந்து வீசும் அவர் இந்த சீசனில் அசத்தவில்லை”

- Advertisement -

“எனவே இந்தப் ஃபார்மில் பாண்டியாவை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய முடியாது. அஜித் அகர்கர் வலுவான கேரக்டர் என்பதால் கடினமான முடிவுகளை எடுப்பார். ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் துபே தேர்வு செய்யப்படாமல் போனால் அதற்கு சிஎஸ்கே தான் பொறுப்பு. ஏனெனில் அவர்கள் துபேவை பவுலிங் செய்ய அனுமதிக்க மறுக்கின்றனர். பாண்டியாவுக்கு பதிலான மாற்று வீரர் வேண்டுமெனில் துபே பவுலிங் செய்ய வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்”

இதையும் படிங்க: பழைய ஃபார்முக்கு வந்த ரிஷப் பண்ட்.. யூசுப் பதானின் சாதனையை தூளாக்கி 2 புதிய சாதனை

“ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் துபே ஆகியோர் பவுலிங் செய்தனர். ஆனால் திடீரென அவர்கள் அதை நிறுத்தி விட்டனர். எனவே நாம் நீண்ட காலத் திட்டத்தை பற்றி பார்க்க வேண்டும். தற்போது பாண்டியா நல்ல ஃபார்மில் இல்லாத நிலையில் துபேவை தேர்வு செய்யலாம். ஆனால் அவருடைய பவுலிங் எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் சாதூரியமான பவுலரான அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் எப்படி அசத்தினார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

Advertisement