இலங்கை பிரீமியர் லீக் ஏலத்தில் ரெய்னாவின் பெயர் இருந்தும் அழைக்க மறுத்த ஏலாதாரர் – ஏலத்தில் நடந்தது என்ன? – ரசிகர்கள் ஏமாற்றம்

Raina-LPL
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். ஆனால் 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருந்த அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்று அனைத்து வகையான பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறியிருந்தார். ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வந்த அவர் சில சீசன்கள் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

ஐபிஎல் தொடரை பொருத்தவரை மிகச் சிறந்த வீரராக பார்க்கப்படும் அவர் மூன்று முறை சென்னை அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு விளையாடியிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக தனது பெயரை பதிவு செய்ததாக சில தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தன.

- Advertisement -

அதன் காரணமாக இலங்கை லீக் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட இருப்பதை நினைத்து ரசிகர்கள் பெருமளவில் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். 40,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் தனது பெயரை அவர் இலங்கை பிரீமியர் லீக்கில் தனது பெயரை பதிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று கொழும்புவில் இந்த ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் சுரேஷ் ரெய்னா பெயர் லிஸ்டில் இருந்தும் அதனை கண்டுகொள்ளாத ஏலாதாரர் சாரு சர்மா ரெய்னாவின் பெயரை அழைக்காமல் அடுத்தடுத்த வீரர்களின் பெயரை ஏலத்தில் விட்டார். கடைசி வாய் சுரேஷ் ரெய்னாவின் பெயரை அவர் ஏலத்தில் அழைக்கவே இல்லை. இதன் காரணமாக ரெய்னா ஏன் ஏலத்தில் அழைக்கப்படவில்லை? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இந்த இலங்கை பிரீமியர் லீக் ஏலத்தில் தனது பெயரை இணைக்கவில்லை என்றும், இந்த தொடரின் ஏற்பாட்டாளர்கள் தான் சுரேஷ் ரெய்னாவின் பெயரை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்கிற அடிப்படையில் லிஸ்டில் சேர்த்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் ஏலதாரர் சுரேஷ் ரெய்னாவின் பெயரை அழைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : என்னோட கேரியர் அவரால வீணானதை விட என் இடம் அவருக்கு கிடைச்சத நினச்சா கடுப்பாகுது – ராயுடு ஆதங்க பேட்டி

சமீபத்தில் வெளியான செய்திகளின்படி சுரேஷ் ரெய்னா இலங்கைத் தொடரில் விளையாடுவதாக கூறப்பட்டதால் அதனை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டு சுரேஷ் ரெய்னா இந்த இலங்கை லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement