9 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தனது தாயை நேரில் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் – நெகிழ்ச்சி பதிவு

Mills-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-ஆவது ஐபிஎல் தொடரை ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி கைப்பற்றி அசத்தியது. ஐபிஎல் வரலாற்றில் அறிமுக சீசனிலேயே பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட குஜராத் அணி வெற்றி பெற்றது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. அதே வேளையில் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் அணியாக பார்க்கப்படும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இத்தொடர் முழுவதுமே மும்பை அணியின் வீரர்களால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை ஆனாலும் அடுத்த ஆண்டில் மும்பை அணி மீண்டும் பலமான கம்பேக் கொடுக்கும் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மும்பை அணியை வலுப்படுத்தும் விதமாக இளம் வீரர்களை லண்டன் அழைத்துச் சென்று அந்த அணியின் நிர்வாகம் சிறப்பு பயிற்சிகளையும் அளித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது மும்பை அணியின் இளம் வீரரான குமார் கார்த்திகேயா 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயை நேரில் சந்தித்துள்ளதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமான அவர் சில போட்டிகளில் அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார்.

தனது பதினைந்தாவது (15) வயதில் கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த தீரா காதல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய குமார் கார்த்திகேயா தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டே கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். மேலும் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்த பிறகு தான் மீண்டும் வீட்டுக்கு வருவேன் என்றும் சபதம் செய்திருந்தார்.

- Advertisement -

அப்படி கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறிய அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சித் தொடரில் அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது மும்பை அணியிலும் இடம் பிடித்துள்ள அவர் தற்போது 24 வயதை எட்டியுள்ள நிலையில் ஒன்பது வருடம் 3 மாதங்களுக்குப் பிறகு தனது தாய் மற்றும் குடும்பத்தினை நேரில் நேரில் சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : இந்திய அணிக்கு புதிய துணைக்கேப்டனாக மாறப்போகும் ஸ்டார் வீரர் – பி.சி.சி.ஐ பிளான்

அவர் தனது அம்மாவையும், குடும்பத்தினரையும் சந்தித்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் சில கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement