டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறவுள்ள நட்சத்திர வீரர்.. வெளியான தகவல் – விவரம் இதோ

DC
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு போட்டியுமே மிக சுவாரசியமாக நடைபெற்று வருவதால் இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கடந்த ஆண்டு காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அவரது தலைமையில் பேட்டிங்கில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பந்துவீச்சில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. குறிப்பாக இந்த தொடரில் இதுவரை அவர்கள் விளையாடியுள்ள 4 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற டெல்லி அணி மற்ற 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிராக அவர்கள் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 272 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். அப்படி அவர்களது மோசமான பந்துவீச்சு காரணமாகவே அந்த அணி சர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு பின்னடைவாக தற்போது டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருந்த குல்தீப் யாதவ் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் திரும்பி வருவது குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பையும் டெல்லி அணியின் நிர்வாகம் வெளியிடவில்லை. அவருடைய காயம் தற்போது வீரியம் அடைந்துள்ளதால் தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிவம் துபேவை 2024 டி20 உ.கோ இந்திய அணியில் செலக்ட் பண்ணுங்க.. காரணம் இது தான்.. யுவ்ராஜ் கோரிக்கை

எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் குல்தீப் யாதவ் அந்த தொடரில் விளையாடுவதற்காகவும் முன்னெச்சரிக்கை காரணமாக தொடர்ச்சியாக ஓய்வில் இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் டெல்லி அணியில் இருந்து விலகவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement