- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அனுஷ்கா சர்மாவை நான் முதன் முதலில் பார்த்தபோது கூறியவை இவைதான் – விராட்கோலி ஓபன் டாக்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் 2013 ஆம் ஆண்டில் இருந்து காதலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அனுஷ்காவுடன் ஏற்பட்ட காதல் மற்றும் அவருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு குறித்து தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் முதல் முறை அவரை ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து நடிப்பதற்காக முதன்முறை சந்தித்தேன்.

- Advertisement -

அனுஷ்கா சர்மாவை பார்க்கும்போது ஒரு ஜோக் ஒன்றினை அவரிடம் கூறினேன். ஏனெனில் நான் அப்போது கொஞ்சம் தயக்கமாகவும், பதட்டமாகவும் அங்கு இருந்தேன். அதனால் நான் அவரிடம் ஜோக் ஒன்றினை கூறினேன். ஏனனில் அப்பொழுது வேறு என்ன செய்வது என்று தெரியாமல் நான் அப்படி செய்தேன். மேலும் விளம்பரப் படத்திற்காக அந்த செட்டில் நின்று கொண்டிருந்த போது அந்த அனுபவம் எனக்கு வித்தியாசமாக இருந்தது.

நான் சரியாக ஜோக் அடித்தேன் என்று நினைத்தேன். ஆனால் அந்த காமெடி சரியான வகையில் செல்லவில்லை. மேலும் அப்போது அவர் உயரமான ஹீல்ஸ் அணிந்திருந்தார். உங்களுடைய உயரம் என்ன என்று கேட்டேன். அதற்கு அனுஷ்கா நான் ஒன்னும் அவ்வளவு உயரம் கிடையாது என்று நடந்து சென்றார். பிறகு நான் விளையாட்டுக்காக கேட்டேன் என்றேன் அவரும் அந்த விளம்பரபடத்தை முடித்து விட்டு சென்றார்.

அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கினோம். பின்னர் என் துணையாக மாறினார், என்னுடைய பக்கபலமாகவும் அவர் செயல்படத்துவங்கினார். எங்களது திருமணம் குறித்த திட்டங்களையும் அனுஷ்க்காவே முடிவு செய்தார் என்று கோலி கூறினார்.

- Advertisement -
Published by