தோனி உள்ள வந்து எல்லாத்தையும் மாத்திட்டாரு.. இருந்தாலும் நல்லா ஆடி தப்பிச்சிட்டோம் – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

KL-Rahul
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணியின் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு அவர்கள் பெற்ற இந்த நான்காவது வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளனர். அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி சென்னை அணியானது :

- Advertisement -

லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19 ஓவர்களின் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி முடிந்த விதம் குறித்து மகிழ்ச்சியாக நினைக்கிறேன். எப்போதுமே ஒரு வெற்றி நல்ல உணர்வை தரும். அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக வைத்து வெற்றி பெற்றுள்ளோம். இந்த மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்குள் அவர்களை சுருட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் மகேந்திர சிங் தோனி பின் வரிசையில் களமிறங்கி எங்களது பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்து கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை சிஎஸ்கே அணி குவிக்க காரணமாக அமைந்தார். பின்னர் மைதானத்தின் தன்மையை உணர்ந்து நாங்கள் சிறப்பான துவக்கத்தை அளித்தோம்.

இதையும் படிங்க : 176 ரன்கள் அடிச்சும் நாங்க லக்னோ அணியிடம் தோக்க இதுவே காரணம் – சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

சி.எஸ்.கே அணியின் ஸ்பின்னர்களும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருந்தாலும் எங்களுடைய பேட்டிங்கில் நல்ல ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது. அடுத்ததாக சென்னை மைதானத்தில் அவர்களுடன் விளையாடப் போகும் போட்டி வித்தியாசமாக அமையும். அங்கேயும் எங்களது வெற்றியை தொடர விரும்புகிறோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement