நாங்க 2 பேரும் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கனும்.. ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – கே.எல் ராகுல் பேட்டி

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19 ஓவர்களின் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ஒன்பது போட்டிகளில் எட்டு வெற்றிகள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. தோல்வியை சந்தித்த லக்னோ அணியானது ஐந்து வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். எங்கள் இன்னிங்சின் போது துவக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் தீபக் ஹூடா மற்றும் நானும் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தோம். இது போன்ற போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் செட் ஆகிவிட்டால் 50-60 ரன்களை கடந்த பின்னர் சதத்தை நோக்கி சென்றிருக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோன்று 15 ஓவர்களில் 150 ரன்கள் வரை சென்றிருந்தால் அடுத்த ஐந்து ஓவர்களில் இன்னும் கூடுதலாக ரன்களை அடிக்க வேண்டும். இப்போதெல்லாம் எந்த அணி அதிக சிக்ஸர்களை அடிக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறுகிறது. எனவே இந்த போட்டியில் நாங்கள் அதிக சிக்சர்களை அடிக்க முயற்சித்து இருக்க வேண்டும். நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் அணியின் எண்ணிக்கை 220-யை தாண்டி இருக்கும்.

இதையும் படிங்க : மேட்ச்க்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டு தான் வந்தோம்.. இம்பேக்ட் பிளேயாரா வந்து மும்பையை காலி செய்த – ராஷிக் பேட்டி

அந்த 20 ரன்கள் தான் தற்போது எங்களுக்கு சற்று பின்னடைவை தந்தது. எப்படி இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். ஸ்டாய்னிஸ் மற்றும் பூரான் போன்ற ஹிட்டர்கள் இன்று விரைவில் ஆட்டமிழந்ததால் சற்று பின்னடைவும் ஏற்பட்டது. இருப்பினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement