இன்னொரு முறை இந்த தப்பை பண்ணீங்க. அடுத்த போட்டியில் ஆடமுடியாது – கே.எல் ராகுலுக்கு எச்சரிக்கை

MI vs LSG bumrah and KL Rahul
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் 37-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்ததால் அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது.

KL Rahul 103

- Advertisement -

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியானது நிதானமாக இன்னிங்சை துவங்குகிறோம் என்று நினைத்து மிகவும் மந்தமாக ஒரு கட்டத்தில் 10 அவர்களுக்கு 60 ரன்களை மட்டுமே குவித்த மும்பை அணியானது அடுத்த பத்து ஓவர்களுக்கு கிட்டத்தட்ட 110 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன் காரணமாக போட்டியின் எந்தவொரு இடத்திலும் மும்பை அணியால் தங்களது ஆதிக்கத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இறுதியில் மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன்காரணமாக லக்னோ அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LSG KL Rahul

அதோடு இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த மும்பை அணியானது அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலுக்கு ஐ.பி.எல் நிர்வாகம் 24 லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை மெதுவாக பந்து வீசியதற்காக ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறைப்படி கே.எல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பந்துவீச்சினை முடிக்க அதிக நேரம் எடுக்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாக தற்போது ராகுலுக்கு 24 லட்ச ரூபாயும் லக்னோ அணியில் ஆடிய வீரர்களுக்கு 6 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விசில் அடிப்பதற்கா 1.5 கோடிக்கு வாங்குனிங்க? இளம் வீரருக்காக சென்னை நிர்வாகத்தை – விளாசும் ரசிகர்கள்

மேலும் ராகுல் இந்த தவறை இரண்டு முறை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள் மேலும் இன்னொரு முறை இதுபோன்று நடைபெற்றால் நிச்சயம் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும், அதோடு 30 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement