பஞ்சாப் 201 ரன்ஸ்.. சேசிங்கில் குறுக்கே கௌசிக் போல வந்த மழை.. கொல்கத்தா வித்யாசமான சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி கொல்கத்தாவில் 45வது போட்டி நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய அந்தப் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 201/4 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யா அதிரடியாக 69 (35) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து 120 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த பிரப்சிம்ரன் சிங் 83 (49) ரன்களை எடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல் 7, மார்கோ யான்சென் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

குறுக்கே வந்த கௌசிக்:

இருப்பினும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25* (16), ஜோஸ் இங்லிஷ் 11* (6) ரன்கள் அடித்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள். கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி ஒரு ஓவரில் 7-0 ரன்கள் எடுத்திருந்த போது குறுக்கே வந்த கௌசிக் போல ஜோராக வந்த மழை நீண்ட நேரம் பெய்தது.

இரவு 11.30 மணி வரை பெய்த மழையால் குறைந்தபட்சம் போட்டியை 5 ஓவர்களாக நடத்த நடுவர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்போதும் மழை பெய்ததால் வேறு வழியின்றி போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவே இந்த வருடம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்ட முதல் போட்டியாகவும் அமைந்தது.

- Advertisement -

வித்யாசமான சாதனை:

அதனால் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதையும் சேர்த்து 9 போட்டிகளில் 11 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் 9 போட்டிகளில் 7 புள்ளிகளில் மட்டுமே பெற்றுள்ள கொல்கத்தா தொடர்ந்து 7வது இடத்தில் தடுமாறுகிறது.

இதையும் படிங்க: மீட்டிங் நடக்கப்போகுது.. சிஎஸ்கேவை தனியாளா சுமக்கும் தோனிக்கு அவங்க யாருமே ஹெல்ப் பண்ணல.. ரெய்னா பேட்டி

இந்தப் போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி 7 முறை மழையால் ரத்து செய்யப்பட்ட போட்டிகளில் ஒரு அங்கமாக இருந்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை மழையால் ரத்து செய்யப்பட்ட போட்டிகளில் அங்கமாக இருந்த அணி என்ற வித்தியாசமான சாதனைப் பெயரைக் கொல்கத்தா தன் வசமாக்கியுள்ளது. இதற்கு முன் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தலா 6 மழையால் ரத்து செய்யப்பட்ட போட்டிகளில் அங்கமாக இருந்ததே முந்தைய சாதனை.

Advertisement