எழுதி வெச்சுக்கோங்க.. இதை செஞ்சதும் கோலியை விட பாபர் பெரிய பிளேயராகிடுவாரு.. கராச்சி ஓனர் பேட்டி

Salim Iqbal
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதற்கு அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக கருதப்படும் பாபர் அசாம் சுமாராக விளையாடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2017 – 2019 காலகட்டங்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்.

ஆனால் தற்போது அதே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விராட் கோலி தான் உண்மையான கிங். பாபர் அசாம் ஃப்ராடு என்று விமர்சனம் செய்து வருகின்றார்கள். ஏனெனில் கடந்த 2 – 3 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறும் அவர் பாகிஸ்தானுக்கு பின்னடைவைக் கொடுத்து வருகிறார். அவருடைய மோசமான ஆட்டத்தால் ஜிம்பாப்வே, அமெரிக்கா கத்துக்குட்டி அணிகளிடம் ஐசிசி தொடரில் பாகிஸ்தான் தோற்றது.

- Advertisement -

பெரிய பிளேயர்:

அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த அவர் விராட் கோலியை போல கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்ததால் மீண்டும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் மீண்டும் பாபர் அசாம் மோசமாக விளையாடினார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் தற்போது பிஎஸ்எல் தொடரில் பெசாவர் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதில் இதுவரை 2 போட்டிகளில் 0, 1 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள பாபர் அசாம் கேப்டனாகவும் அசத்தவில்லை. அதனால் அவரது தலைமையிலான பெஷாவர் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. இந்நிலையில் தற்போதைய தடுமாற்றத்திலிருந்து கம்பேக் கொடுத்த பின் விராட் கோலியை விட பாபர் அசாம் பெரிய வீரராக வருவார் என்று கராச்சி கிங்ஸ் பிஎஸ்எல் அணி உரிமையாளர் சல்மான் இக்ஃபால் கூறியுள்ளார்.

- Advertisement -

க்ளாஸ் பேசும்:

ஆனால் அப்படிப்பட்ட தரமான பேட்ஸ்மேனை தங்களது அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கம்பேக் கொடுக்கும் போது விராட் கோலி உட்பட இந்த உலகின் அனைத்து வீரர்களை விட பாபர் அசாம் பெரிய வீரராக வருவார். கேரி சோபர்ஸ், சர் ரிச்சர்ட்ஸ் ஆகியோருடைய பெயர்களை பாபர் நிரப்புவார்”

இதையும் படிங்க: ஷ்ஷ் வாயை மூடுங்க.. கேப்டன்ஷிப் பற்றி தோனியின் பெயரை இழுத்த ராஜாமணியை அமைதியாக்கிய அஸ்வின்

“க்ளாஸ் நிரந்தரமானது. அதை எப்போதும் மாற்ற முடியாது. அவரிடம் அது இருக்கிறது. ஸ்டைலும் நிரந்தரமானது. எனவே கம்பேக் கொடுக்கும் போது அவர் வலுவாக வருவார். எங்களுடைய அணியில் அவரை 3வது இடத்தில் விளையாட வைக்க விரும்புகிறோம். ஆனால் அதை அவர் விரும்பாததால் பாபர் முகமது அமீர், இமாத் வாசிம் உள்ளிட்டவர்களை விடுவிக்க நேர்ந்தது” எனக் கூறினார்.

Advertisement