எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கப்போவது இவர்தான் – ஜேக் காலிஸ் கருத்து

Kallis
- Advertisement -

ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியானது அக்டோபர் ஐந்தாம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

worldcup

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வரும் வேளையில் ஒவ்வொரு அணியுமே தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

அதற்கு முன்னதாக தற்போதே இந்த உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் அதிக ரன்கள் குவிப்பார்கள்? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Jos-Buttler

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜேக் காலிஸ் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தான் இந்த தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்திய மைதானங்களில் அவர் எப்பொழுதுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோன்று இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் இருக்கும் அவருக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அந்த அணியை மீண்டும் அவர் சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் செல்ல முனைவார்.

இதையும் படிங்க : அவர வெச்சுகிட்டு ஆசிய கோப்பை ஜெயிக்கலாம் ஆனா அந்த 6 டீம வீழ்த்தி உ.கோ ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் – மதன் லால் ஓப்பன்டாக்

எனவே அவரது ஆட்டம் இந்த தொடரில் அற்புதமாக இருக்கும் என்று கருதுவதாக ஜாக் காலிஸ் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் இதுவரை 165 ஒருநாள் போட்டியில் விளையாடி 4647 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்களும், 24 அரைசதங்களும் அடங்கும்.

Advertisement