ஆட்டநாயகன் வெல்ல அது தான் ஹெல்ப் பண்ணுச்சு.. என்னோட லட்சியமே இந்தியாவுக்கு ஆடணும்.. கலீல் பேட்டி

Khaleel Ahmed
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 43, டேவிட் வார்னர் 52, கேப்டன் ரிசப் பண்ட் 51 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் ரவீந்திரா 2 (12), சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ரகானே 45, டேரில் மிட்சேல் 34, சிவம் துபே, ஜடேஜா 21*, எம்எஸ் தோனி 37* (16) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்தது.

- Advertisement -

பெரிய லட்சியம்:
அதன் காரணமாக 2 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 21 ரன்கள் மட்டும் கொடுத்து ருதுராஜ், ரச்சின் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட கலில் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதே இந்த போட்டியில் தாம் அசத்தியதற்கான காரணம் என்று கலீல் அகமது கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகள் தான் டி20 கிரிக்கெட்டில் எப்படி அசத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இந்தியாவுக்கு மீண்டும் விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக வேலை செய்தேன். கடந்த ஆறு மாதமாக நிறைய கிரிக்கெட்டில் விளையாடியது என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக தெரிந்து கொள்வதற்கு உதவியது. பந்து ஸ்விங்காகி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை விரும்புகிறேன். தற்போது எனக்கு நானே எப்படி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதையும் கண்டறிய முயற்சித்து வருகிறேன்”

இதையும் படிங்க: டெல்லி அணியின் ஹோம் கிரவுண்ட் விசாகபட்டினமா? இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

“டெஸ்ட் போட்டிகள் தான் உங்களுக்கு பந்து உங்களுடைய கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பது உட்பட நிறையவற்றை கற்றுக் கொடுக்கிறது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய லட்சியமாகும்” என்று கூறினார். அந்த வகையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை 2 வெற்றிகளுக்கு பின் இந்த போட்டியில் முதல் முறையாக தோல்வியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement