இன்னைக்கு இலங்கை தரைமட்டமாகி கிடக்க இந்தியாவை சேர்ந்த அவர் தான் காரணம்.. ரணதுங்கா விமர்சனம்

Arjuna Ranatunga
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. 1992 உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்ற இலங்கை முரளிதரன், மலிங்கா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்களால் உலகத்திற்கே சவாலை கொடுத்து 2014 டி20 உலகக் கோப்பையையும் வென்றது.

ஆனால் அவர்கள் ஓய்வுக்கு பின் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திணறும் இலங்கை 2022 ஆசிய கோப்பையை வென்றதால் மறுமலர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜனவரியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவிடம் 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் சொந்த மண்ணில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 50 ரன்களுக்கு சுருண்டு அவமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரணதுங்கா விமர்சனம்:
அந்த நிலைமையில் சனாக்கா, ஹசரங்கா போன்ற சில முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் பின்னடைவுடன் 2023 உலகக் கோப்பையில் விளையாடிய அந்த அணி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி கொஞ்சம் கூட முன்னேறாமல் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்த அடுத்தடுத்த தோல்விகளால் ஏமாற்றமடைந்த இலங்கை விளையாட்டு துறை தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அதிரடியான உத்தரவிட்டது.

அப்படி வாரியத்தில் தங்களின் விதிமுறையை தாண்டி அரசு தலையிட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிப்பதாக கடந்த வாரம் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது போக 2023 உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த இலங்கை 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி மற்றுமொரு அவமானத்தை சந்தித்து அதள பாதாளத்தில் தவிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இலங்கை வாரியம் இன்று இப்படி தரைமட்டமாக கிடப்பதற்கு இந்திய வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தான் காரணம் என்று ரணதுங்கா பரபரப்பான விமர்சனத்தை வைத்துள்ளார். குறிப்பாக ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் ஜெய் ஷா இலங்கை வாரியத்தை மறைமுகமாக நடத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜெய் ஷா இலங்கை கிரிக்கெட்டை நடத்துகிறார். ஜெய் ஷா கொடுக்கும் அழுத்தத்தாலேயே இலங்கை வாரியம் பாழாகி விட்டது”

இதையும் படிங்க: இந்தியா தான் இந்த வேர்ல்டுகப்பை ஜெயிக்கும். அதுவும் எப்படி தெரியுமா ? – விவ் ரிச்சர்ட்ஸ் கருத்து

“இந்தியாவிலிருந்து ஒருவர் இலங்கை கிரிக்கெட்டை மொத்தமாக பாழாக்கி விட்டார். தம்முடைய தந்தை இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால் அவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்கிறார். குறிப்பாக இலங்கை வாரிய அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா ஆகியோரிடையே இருக்கும் தொடர்பால் அவர் எங்கள் வாரியத்தை கட்டுப்படுத்துகிறார்” என்று கூறினார்.

Advertisement