ஒரே அழைப்பில் அமீரகத்தை கைக்குள் போட்டு.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தானுக்கு ஆப்படித்த ஜெய் ஷா

Jay Shah 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 22ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரில் 58 போட்டிகள் நடைபெற்று முடிந்தது. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது.

அத்துடன் ஒரு வாரம் கழித்து நிலைமைகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து மீண்டும் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்தியாவைப் போலவே பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடைபெற்று வந்தது. அந்தத் தொடரும் எல்லைப் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருப்பினும் அந்தத் தொடரை ஐபிஎல் போல் ரத்து செய்யாமல் துபாயில் நடத்துவோம் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது.

- Advertisement -

ஒரே ஃபோன் கால்:

அதைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டிருந்தும் இந்தியாவால் பாதுகாப்பாக ஐபிஎல் தொடரை நடத்த முடியவில்லை என்று சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். ஆனால் அடுத்த நாள் பிஎஸ்எல் தொடரை தங்களுடைய நாட்டில் நடத்த முடியாது என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்தது. குறிப்பாக எல்லையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் தங்களுடைய நட்பு நாடான இந்தியாவைத் பகைத்து கொண்டு பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரை நடத்த விரும்பவில்லை என்று அமீரக வாரியம் அறிவித்தது.

அதன் காரணமாக வேறு வழியின்றி பிஎஸ்எல் தொடரை தள்ளி வைப்பதாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது. இந்நிலையில் இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரை துபாயில் நடத்துவதை ஜெய் ஷா தான் நிறுத்தியதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. பிஎஸ்எல் தொடர் துபாயில் நடக்கப் போகிறது என்ற செய்தி வெளியானதும் ஜெய் ஷா அமீரக வாரியத்தை தொலைபேசியில் அழைத்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு சொன்னதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் நண்பன்:

லாக் டவுன் காரணமாக இந்தியா 2021 டி20 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை அமீரகத்திற்கு வழங்கியது. மேலும் இந்தியாவின் ஜெய் ஷா தற்போது ஐசிசி அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். எனவே இந்தியாவின் நட்பை முறித்துக் கொண்டு ஜெய் ஷா’வை மீறி பாகிஸ்தானுக்கு உதவ அமீரக வாரியம் மறுத்து விட்டது.

இதையும் படிங்க: கில், பண்ட், ராகுல் யாரும் இல்ல.. பும்ரா தான் கேப்டன்.. மேலும் ஒரு கண்டிஷன் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முக்கிய முடிவு

இது பற்றி அமீரக வாரியத்தின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா பாய்க்கு கடைமைப்பட்டுள்ளோம். எல்லையில் ராணுவ வீரர்கள் இயற்கை எய்திக் கொண்டிருக்கும் போது எங்களால் அமைதியாக இருக்க முடியாது” என்று க்ரிக்பஸ் இணையத்தில் கூறினார்.

Advertisement