இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யானது இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
ஜஸ்ப்ரீத் பும்ரா தான் புதிய டெஸ்ட் கேப்டன் :
அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அணிக்கு இந்த இங்கிலாந்து தொடரானது மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
ஏனெனில் 2025-27 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான சுழற்சியின் முதல் தொடராக இந்த தொடர் அமைந்துள்ளதால் இந்திய அணிக்கு இது மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. அதோடு 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்பதால் இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தவும் இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வுபெற்று வெளியேறியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட், சுப்மன் கில், கே.எல் ராகுல் ஆகிய மூவரில் ஒருவருக்கு புதிய டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் வீரரான சுப்மன் கில் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் வேளையில் அவரே டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த மூவரில் யாருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா தான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி :
இதையும் படிங்க : கொஞ்ச நாளே இருந்தாலும் என்னால் இதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது – சி.எஸ்.கே குறித்து பிரேவிஸ் நெகிழ்ச்சி
இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ரா தான் அடுத்த கேப்டன் என்றும் தற்போதைக்கு இந்திய டெஸ்ட் அணியில் யாருக்கும் துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற கண்டிஷன் உடன் கேப்டன் குறித்த முடிவினை பி.சி.சி.ஐ எடுத்துள்ளது. மேலும் அஜித் அகார்கர் மற்றும் கம்பீர் ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவிக்கும்போது புதிய கேப்டனையும் அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.