கொஞ்ச நாளே இருந்தாலும் என்னால் இதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது – சி.எஸ்.கே குறித்து பிரேவிஸ் நெகிழ்ச்சி

Dewald Brevis
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே 8-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது தடைப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான சூழல் காரணமாக தற்காலிகமாக இந்த ஐபிஎல் தொடரானது நிறுத்தப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.

சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த டேவால்டு பிரேவிஸ் :

மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் நிலவி வந்த வேளையில் இப்படி இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் இந்தியாவில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக ஒரு வாரத்திற்கு பிறகு நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்த பிறகே அடுத்த கட்டமாக இந்த தொடரானது நடைபெறுமா? நடைபெறாதா? என்று தெரியவரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைக்கு 10 அணிகளிலும் பங்கேற்றுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அந்த வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ள வேளையில் வெளிநாட்டு வீரர்களும் விமானம் மூலம் பத்திரமாக அவர்களது நாட்டுக்கு புறப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு சி.எஸ்.கே அணியில் மாற்று வீரராக இடம்பிடித்த தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரரான டெவால்டு பிரேவிஸ் இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாடியது குறித்து நெகிழ்ச்சியான சில கருத்துக்களை தனது சமூகவலை பக்கத்தில் குறிப்பிட்டு விட்டு நாடு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : சென்னை அணிக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தியா முழுவதும் இருந்து எனக்கு ஆதரவுகள் நிறையவே கிடைத்தன. சென்னை அணியில் நான் இடம்பெற்று சில போட்டிகளே ஆடிய வேளையில் எனக்கு கிடைத்த ஆதரவும், வரவேற்பும், அன்பும் என்னை உண்மையிலேயே நெகிழவைத்துள்ளது.

இதையும் படிங்க : எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்? – வெளியான தகவல்

சிஎஸ்கே ரசிகர்கள் கொடுத்த இந்த நினைவுகள் என் வாழ்நாள் முழுவதுக்குமானவை. இந்த நாட்களை நான் மறக்க மாட்டேன் மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என உணர்வு பூர்வமான ஒரு பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement