உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம்.
இதுவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக யாரை ஆடவைப்பது என்று விராட்கோலி தற்போது குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தவான் காயம் அடைந்த தொடர்ந்து ராகுல் தொடக்க வீரராக தற்போது ஆடி வருகின்றனர்.
விஜய் சங்கருக்கு பதிலாக நான்காவது வீரராக பண்ட் அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டரில் இருக்கும் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஒருவேளை அவர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டானால் மிடில் ஆர்டரில் ரன் குவிப்பு தடுமாறி விடும். அப்படி இந்திய அணி தடுமாறும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. தற்போது உள்ள அணியில் ரிஷப் பண்ட், தோனி மற்றும் பாண்டியா ஆகிய மூவர் மட்டுமே உறுதியாக அணியில் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். ஆகையால் ஜாதவிற்கு பதிலாக ஜடேஜாவை அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரை ஆடவைப்பது என்ற கேள்வி ஒவ்வொரு போட்டியின் போதும் எழுகிறது. இதனால் கோலி யாரை அணியில் எடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளார் என்றும் தெரிகிறது.