தோனியின் பெருந்தன்மை. ஜடேஜா 16 கோடிக்கு தக்கவைக்கப்பட காரணம் இதுதானாம் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட நேற்று நம்பர் 30ஆம் தேதி அறிவிக்க கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தனர்.
அதன்படி நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி தங்களது அணியில் தக்க வைத்துள்ள 4 வீரர்கள் குறித்த விவரங்களையும் தெளிவாக வெளியிட்டிருந்தது.

csk

- Advertisement -

அதன்படி சி.எஸ்.கே அணியின் முதல் வீரராக ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி 12 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், இந்திய அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணியின் முக்கிய வீரர்களான பிராவோ, டூபிளெஸ்ஸிஸ், தீபக் சஹர், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் ஆகியோர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி ரூபாய்க்கு முதல் வீரராக சிஎஸ்கே அணி தக்க வைக்க என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே சென்னை அணியின் கேப்டன் தோனி அணி நிர்வாகத்திடம் தன்னை முதல் நபராக தக்க வைக்க வேண்டாம். எனக்கு அவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க வேண்டாம் என்று நிர்வாகத்திடம் முறையிட்டு இருந்தார்.

Jadeja

அதன்படி தற்போது சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஜடேஜாவை முதல் வீரராக சென்னை அணி தக்க வைத்தது. அவரைத் தொடர்ந்து தோனி இரண்டாவது வீரராக தக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே தோனி தன்னை முதல் வீரராக தக்க வைக்க வேண்டாம் என்று பெருந்தன்மையோடு கேட்டுக்கொண்டதால் சிஎஸ்கே அணியின் முதல் நபராக தற்போது ஜடேஜா தக்க வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : ஐ.பி.எல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு லிஸ்ட் இதோ – ரசிகர்களுக்கான பதிவு

சிஎஸ்கே அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தனது ஆல்ரவுண்ட் பர்பார்மென்ஸை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா நிச்சயம் தோனிக்கு அடுத்து அணியை வழிநடத்துவார் என்கிற காரணத்தினாலேயே ஜடேஜாவை இவ்வளவு பெரிய தொகைக்கு சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement