நீங்க வேணா பாருங்க.. இந்த 3 அணிகளில் ஒன்றுதான் உலககோப்பையை வெல்லும் – ஜாக் காலிஸ் கணிப்பு

Kallis
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது கடைசி வாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட லீக் தொடரின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை எந்த ஒரு அணியும் அதிகாரவபூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்தால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

அதே வேளையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் தற்போதைக்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இருந்தாலும் வெளிப்புறமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் அரையிறுதிக்கு தகுதிபெற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இன்னும் ஒரு சில தினங்களில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பது உறுதி ஆகிவிடும். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்றும் அணி எது? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாக் காலிஸ் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இம்முறை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளே இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதிலும் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவதாலும், ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும் என்பதனாலும், மைதானத்தின் தலைமையை அவர்கள் எளிதில் கணித்து விளையாட முடியும் என்பதாலும் அவர்களுக்கே அதிக வாய்ப்புள்ளது. அதே வேளையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறப்போகும் அனைத்து அணிகளுக்கும் இது தொடர் மீண்டும் புதிதாக ஆரம்பிப்பது போல் தான் இருக்கும்.

இதையும் படிங்க : இன்னும் 34 ரன் தேவை..சச்சினின் மிகப்பெரிய சாதனையை காலி செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

மேலும் மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய அணி மிகவும் டேஞ்சரான அணியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த அவர்கள் தற்போது தங்களது கம்பேக்கில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால் அவர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாகவே தான் கருதுவதாக ஜாக் காலிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement