இன்றைய 3 ஆவது டி20 போட்டியில் இந்திய வீரரான இவர் விளையாட வாய்ப்பில்லை – வெளியான தகவல்

shreyas iyer
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்துள்ள முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று இரவு தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

ஏற்கனவே இரண்டு போட்டிகளை இந்திய அணி கைப்பற்றி தொடரை வென்று விட்டதால் நிச்சயம் மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் முதல் 2 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காத சில வீரர்களுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான இஷன் கிஷன் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. அதன்படி நேற்றைய 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய போது துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் நான்காவது ஓவரின் நான்காவது பந்தில் தலையில் காயம் அடைந்தார். லஹிரு குமாரா வீசிய அந்த அதிவேக பவுன்சர் இஷான் கிஷன் ஹெல்மெட்டில் நேரடியாக பட்டது. இதன் காரணமாக நிலைதடுமாறிய இஷான் கிஷன் சிறிது நேரம் கலக்கத்துடன் இருந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.

ishan kishan

இருப்பினும் அவரால் நேற்று பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 15 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரிகள் அடித்து 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் போட்டி முடிந்த பிறகு இஷான் கிஷனுக்கு ஏற்பட்ட இந்த காயம் காரணமாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி வெளியானது. எனவே நிச்சயம் இன்றைய போட்டியில் இஷான் கிஷன் விளையாட மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக போட்டி நடைபெறுவதாலும் அதுமட்டுமின்றி இஷான் கிஷனுக்கு ஏற்பட்ட காயம் குறித்த தன்மையை முழுவதுமாக தெரியாததால் இன்றைய போட்டியிலும் அவரை விளையாட வைத்து விஷப்பரீட்சை நடத்துவதை விட அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக இன்றைய போட்டியில் துவக்க வீரரான இஷான் கிஷன் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நம்ம டீம்ல எல்லாருமே டேலன்ட் தான். நாம பண்ண வேண்டியது ஒரே விஷயம் தான் – ரோஹித் மகிழ்ச்சி

அதோடு மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் ஏற்கனவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக தெரிவு செய்யப்பட்ட மாயங்க் அகர்வால் இன்றைய போட்டியில் துவக்க வீரராக விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement