பாண்டியா செஞ்ச அந்த 2 தவறால் தான்.. கையிலிருந்த மும்பையின் வெற்றி பறிபோச்சு.. விமர்சித்த இர்பான் பதான்

Irfan Pathan
- Advertisement -

அகமதாபாத் நகரில் மார்ச் 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45, கேப்டன் கில் 31 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 43, நமன் திர் 20, தேவால்ட் ப்ரேவிஸ் 46 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் கடைசி 5 ஓவரில் 7 விக்கெட்டுகள் கைவசம் வைத்திருந்த மும்பைக்கு வெறும் 45 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அப்போது திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, கேப்டன் பாண்டியா 11 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் கொடுக்க தவறினர்.

- Advertisement -

பாண்டியாவின் தவறுகள்:
அதன் காரணமாக வெற்றி கண்ட குஜராத்துக்கு அதிகபட்சமாக ஸ்பென்ஷர் ஜான்சன், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் புதிய கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா செய்த 2 தவறுகள் மும்பையின் தோல்விக்கு காரணமானதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

இது பற்றி இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 2 பெரிய தவறுகள் செய்தார். முதலாவதாக பவர் பிளே ஓவர்களில் அவர் 2 ஓவரை வீசியது பெரிய தவறாகும். அவர் பும்ராவை பந்து வீசுவதற்கு மிகவும் தாமதமாக அழைத்தார். இரண்டாவதாக சேசிங் செய்யும் போது அவர்கள் டிம் டேவிட்டை மேல் வரிசையில் களமிறக்கினர். குறிப்பாக ரசித் கானுக்கு ஒரு ஓவர் மீதமிருந்த போது பாண்டியா அவரை மேலே அனுப்பினார்”

- Advertisement -

“ஒருவேளை சமீபத்தில் எந்த கிரிக்கெட்டையும் விளையாடாததால் ரசித் கானை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக பாண்டியா அப்படி செய்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் அழுத்தமான நேரத்தில் ரசித் கானுக்கு எதிராக பாண்டியா போன்ற அனுபவமிகுந்த இந்திய பேட்ஸ்மேன் பெவிலியனில் அமர்ந்திருப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இதுக்கு தான் இந்தியாவுக்கு விளையாடாம ஐபிஎல்’க்கு தயாரானீங்களா.. சொதப்பிய மும்பை வீரரை கலாய்த்த இந்திய ரசிகர்கள்

அவர் கூறுவது போல டாஸ் வென்ற பின் பவர் பிளேவில் 2 ஓவர்களை போட்ட பாண்டியா அதில் விக்கெட் எடுக்காமல் 20 ரன்களை வாரி வழங்கிய பின்னரே பும்ராவை அழைத்தார். அதே போல ரசித் கான் வீசிய 16வது ஓவரில் டிம் டேவிட் திணறியதால் மும்பை வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் பாண்டியாவின் 2 கேப்டன்ஷிப் தவறுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement