2 அட்டவணை வரும்.. ஐபிஎல் 2024 தொடர் துவங்கும் இடம், தேதியை இப்போதே வெளியிட்ட சேர்மேன்

Arun Dhumal
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் வரும் கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இம்முறை கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் வாங்கி முடித்தன. இதை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைப்பதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன.

அதில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை அதிரடியாக கழற்றி விட்ட மும்பை ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக நியமித்துள்ளது. எனவே அவருடைய தலைமையில் மும்பை எப்படி அசத்தப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே போல 41 வயதை தாண்டியுள்ள ஜாம்பவான் எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

- Advertisement -

2 அட்டவணை:
கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி சிறப்பாக செயல்பட்டு சென்னை ஐந்தாவது கோப்பையை வெல்ல உதவிய அவர் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சமம் செய்தார். எனவே இந்தியாவுக்கு மூன்று விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரரான அவர் ஒரு வருடம் கழித்து மீண்டும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் 2024 ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வியும் நிலவுகிறது. ஏனெனில் 2009 தேர்தலின் போது மொத்த ஐபிஎல் தொடரும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அதே போல 2014 தேர்தல் நடைபெற்ற போது அந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகள் துபாயில் நடைபெற்றது.

- Advertisement -

இருப்பினும் 2019ஆம் ஆண்டு மட்டும் தேர்தல் நடைபெற்றாலும் ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவிலேயே நடைபெற்றது. இந்நிலையில் 2019 போலவே இம்முறை தேர்தல் நடைபெற்றாலும் 2024 சீசன் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் என்று ஐபிஎல் தொடரின் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். அத்துடன் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் அட்டவணை தேர்தல் தேதிகளை மையப்படுத்தி 2 பகுதிகளாக வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் முன்னதாக சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு – விவரம் இதோ

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மார்ச் 22 ஆம் தேதி இந்த தொடரை துவங்குவதற்காக நாங்கள் பார்க்கிறோம். அதற்காக நாங்கள் அரசு ஏஜென்சிகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருகிறோம். அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் ஆரம்பக்கட்ட அட்டவணையை முதலாவதாக நாங்கள் வெளியிட உள்ளோம். இம்முறை மொத்த தொடரும் இந்தியாவில் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement