இந்திய அணியில் பதிரானாவை விளையாட வைக்க நாம இதை பண்ணலாமே? – ரசிகை கொடுத்த பலே ஐடியா

Pathirana
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியிருந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் தொடரில் தோனி கூறியபடியே மாஸான கம்பேக்கை கொடுத்து இந்த ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதுமட்டுமின்றி குஜராத் அணியை முதலாவது குவாலிபயர் போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

Pathirana

இப்படி சென்னை அணி கொடுத்திருக்கும் அசத்தலான கம்பேக்-க்கு ஒரு முக்கிய காரணமாக இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவும் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் சென்னை அணியில் இவர் இணைந்த பிறகு டெத் ஓவர் பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

நல்ல வேகத்தில் வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி வரும் அவர் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு அற்புதமாக எதிரணிகளுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார். தோனியும் பதிரானாவின் சிறப்பான பந்துவீச்சை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

tweet

இந்நிலையில் மதீஷா பதிரானாவை இந்திய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்று பெண் ரசிகை ஒருவர் வினோதமான முறையில் ஒரு கோரிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் முன்வைத்துள்ளார். அந்த வகையில் வெளிநாடுகளில் வீரர்கள் எவ்வாறு குடிபெயர்ந்து மற்ற நாடு அணிகளுக்காக விளையாடுகிறார்களோ அதே போன்று பதிரானா இந்தியாவில் இருக்கும் என்னை போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் இந்திய குடியுரிமை பெற்று இந்திய அணிக்காக விளையாடலாம் அல்லவா? என்று ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாட்டை விட ஐபிஎல் பணமே முக்கியம், டி20க்காக இங்கிலாந்து அணிலிருந்து வெளியேறும் நட்சத்திர வீரர் – ரசிகர்கள் அதிருப்தி

அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வேடிக்கையாக இந்த கருத்தை அந்த பெண் ரசிகை பகிர்ந்திருந்தாலும் இதில் கூறப்பட்டது போல் பதிரானா இந்தியா பெண்ணை திருமணம் செய்து கொண்டு இந்திய குடியுரிமை பெற்று விளையாடினால் தான் என்ன? என்று ரசிகர்களும் அதற்கு பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement