அதுல சொதப்புறாங்களான்னு பாப்போம்.. இனிமேல் இந்தியாவை தோற்கடிப்பது ரொம்ப கஷ்டம்.. பாண்டிங் கருத்து

Ricky Ponting 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2/3 என சரிந்த இந்தியா விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் அபாரமான வெற்றி பெற்றது.

அதே போல ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் எளிதாக வென்ற இந்தியா பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான 3வது போட்டியில் பவுலர்களின் அட்டகாசமான செயல்பாடுகளால் மற்றுமொரு எளிதான வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக பவுலர்கள் 191 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தானை ரோகித் சர்மா 86 ரன்கள் விளாசி அடித்து நொறுக்கியதால் உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றியை பதிவு செய்த இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

ரொம்ப கஷ்டம்:
அந்த வகையில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா குறைந்தபட்சம் செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவது இப்போதே உறுதியாகியுள்ளது. மேலும் பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் 2011 போல இம்முறை நிச்சயமாக கோப்பையை வெல்ல முடியும் முடியும் என்ற நம்பிக்கையும் இந்திய ரசிகர்கள் மனதில் ஆழமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் அனைத்து துறைகளையும் வலுவான செயல்பாடுகளால் பூர்த்தி செய்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ள இந்தியாவை இத்தொடரில் தோற்கடிப்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இருப்பினம் அதிகப்படியான அழுத்தம் கொண்ட நாக் அவுட் போட்டிகளில் இந்தியா வழக்கம் போல சொதப்பாமல் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவை தோற்கடிப்பது எதிரணிகளுக்கு கடினமாக இருக்கும் என்று நான் சொல்லி வருகிறேன். ஏனெனில் அவர்களிடம் திறமையான அணி இருக்கிறது. மேலும் வேகப்பந்து வீச்சு, சுழல், டாப் ஆர்டர் மாற்ற மிடில் ஆர்டர் என அனைத்து துறைகளிலும் அவர்கள் பூர்த்தியடைந்துள்ளார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலியை விட அதை சரியா கையாளும்.. ரோஹித் தான் சிறந்த கேப்டன்.. பாண்டிங் கருத்து

“அதன் காரணமாக அவர்களை தோற்கடிப்பது எதிரணிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இப்போதும் அதிகப்படியான அழுத்தம் கொண்ட போட்டிகளில் அவர்கள் எப்படி தங்களை தாங்கி நிறுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த 2015, 2019 உலகக் கோப்பைகளில் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்தியா வீர நடை போட்டது. ஆனாலும் நாக் அவுட் போட்டியில் முக்கிய நேரத்தில் சொதப்பிய இந்தியா வெறும் கையுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement