IND vs PAK : 7 மணிநேரம் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். கொஞ்சம் பாத்து பண்ணுங்க. ஷாஹீன் அப்ரிடிக்கு – இந்திய ரசிகர் கோரிக்கை

Shaheen-Afridi-and-IND-Fan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் எப்போது மோதினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதோடு இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் போது உலகளவில் அந்த போட்டியை ரசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கோடிகளில் இருக்கும். அந்த அளவிற்கு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் நடப்பு ஆசியக் கோப்பை தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கிய 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஆசிய கோப்பை தொடரில் ஏற்கனவே லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன.

- Advertisement -

ஆனால் அந்தப் போட்டி முழுவதுமாக நடைபெறாமல் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது அசத்தலான பந்துவீச்சில் திணறடித்திருந்தனர். இந்திய அணியின் டாப் ஆர்டர் அந்த போட்டியில் பாகிஸ்தான் வேகத்தில் சிக்கி சுருண்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் அளித்திருந்தது.

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் சூப்பர் 4 சுற்றில் அவரது பந்துவீச்சை இந்திய அணியின் வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்? என்ற அச்சம் இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி நேற்று துவங்கிய சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கிய ஆட்டத்திலும் இந்தியா பாகிஸ்தான் மோதியது.

- Advertisement -

இந்த போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டதால் செப்டம்பர் 11-ஆம் தேதியான இன்று ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக ஷாஹீன் அப்ரிடிக்கு இந்திய ரசிகர் ஒருவர் வைத்த கோரிக்கை குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டிக்கு முன்பாக மைதானத்திற்கு வந்த இந்திய ரசிகர் ஒருவர் கையில் வைத்திருந்த பதாகையில் :

இதையும் படிங்க : IND vs PAK : ஓகே போதும்.. நான் டீவிய ஆஃப் பண்ணிக்குறேன். இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து – ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

“7 மணி நேரம் டிரைவ் செய்து இந்தியா பேட்டிங் செய்வதை பார்க்க நேரில் வந்திருக்கிறேன். எனவே நீங்கள் கொஞ்சம் பொறுமையாக பந்து வீசுங்கள் ப்ளீஸ்” என்று அவர் அந்த பதாகையின் மூலம் தனது கோரிக்கையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி அவரது ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதுவரை இந்த போட்டியில் ஐந்து ஓவர்கள் வீசியுள்ள ஷாஹீன் அப்ரிடி 37 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement