IND vs PAK : 100 டெஸ்ட் ஆடுன எனக்கு இது தெரியாதா? ஆட்டநாயகன் விராட் கோலி அளித்த – அசத்தலான பேட்டி

Virat-Kohli
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட 50 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக டாப் 4 பேட்ஸ்மேன்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கினை துரத்திய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக 94 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் அடித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

விராட் கோலி அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறிய அவர் போட்டி முடிந்து அளித்த பேட்டியில் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்த இன்டர்வியூவை விரைவாக முடித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.

ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு பங்களிப்பை வழங்க நான் தயாராக வேண்டும். இந்த போட்டியில் கே.எல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் அதிரடியாக விளையாடியதால் நான் ஸ்ட்ரைக் ரொட்டேட் மட்டுமே செய்ய நினைத்தேன். இந்த போட்டியில் நாங்கள் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்ததால் எளிதாக ரன்கள் கிடைத்தன. இந்த போட்டியில் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

எப்பொழுதுமே நான் பேன்சியான ஷாட்களை விளையாடுவது கிடையாது. சரியான கிரிக்கெட் ஷாட்களை விளையாடினால் ரன்கள் தானாக கிடைக்கும். கே எல் ராகுல் மற்றும் நான் என இருவருமே கன்வென்ஷனல் கிரிக்கெட்டர்ஸ். எங்களது பாட்னர்ஷிப் இந்த போட்டியில் மிக சிறப்பாக இருந்தது. காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல் ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs PAK : இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்கெட்ச் போட்டு பண்ணிட்டாங்க. தோல்விக்கு பிறகு – பாபர் அசாம் வருத்தம்

அடுத்த போட்டி இன்று மதியம் 3 மணிக்கு இருக்கிறது. ஆனால் நாங்கள் டெஸ்ட் பிளேயர்ஸ் அதிலும் நான் நூறு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளேன். என்னால் அடுத்த நாளே உடனே எப்படி வந்து விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் என்றும் கூறினார். மேலும் இந்த மைதான ஊழியர்களை என் சார்பாக பாராட்ட விரும்புகிறேன். அவர்களது பணி மிகச் சிறப்பாக இருந்தது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement