- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை நாங்கதான் ஜெயிப்போம் – பாகிஸ்தான் வீரர் சொன்ன வினோதமான காரணம்

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக இங்கு நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி துவங்க இருக்கும் இந்த தொடருக்காக அனைத்து அணைகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலில் அனைத்து அணிகளும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த டி20 தொடர் குறித்த தங்களது கருத்துக்களை முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரரான இமாத் வாசிம் பாகிஸ்தான் அணி இந்த டி20 உலக கோப்பை தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மைதானங்களும் எங்களுக்கு சொந்த மைதானங்கள் போன்றவை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இங்கு தான் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்களுடைய ஹோம் ரவுண்டாக இந்த ஐக்கிய அரபு மைதானங்கள் தான் இருந்து வருகின்றன.

எனவே இங்கு உள்ள சூழ்நிலை மற்றும் மைதானத்தின் தன்மை என அனைத்தும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே நிச்சயம் 100 சதவீத உழைப்பை நாங்கள் வழங்கி இந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் இந்த உலக கோப்பை தொடருக்கு முன்பாக 2-3 டி20 தொடரை இழந்திருந்தாலும் நிச்சயம் எங்களிடம் இந்த உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு திறமை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by