மைதானத்தில் சண்டை..கண்ணாடி உடைத்தல்..சட்டயை கழற்றி நடனம் – பங்களாதேஷ் வீரர்கள் மீது ஐசிசி அபராதம்!

icc
- Advertisement -

இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லாக இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.நேற்றைய இந்த போட்டியின் போது இருஅணி வீரர்களுக்கு கைகலப்பும்,வாக்குவாதமும் ஏற்பட்டது. அதிலும் உச்சகட்டமாக உடைமாற்றிடும் அறை கண்ணாடிகள் வங்கதேச வீரர்களால் அடித்து உடைக்கப்பட்டன.

bangal

- Advertisement -

19வது ஓவரை உதனா வீச முதல் இரண்டு பந்துகளும் முஷ்பிகூர் ரஹ்மானின் தலைக்கு மேலே எழும்ப இரண்டாவது பந்திற்கு லெக் அம்பயர் நோபால் சிக்னல் காண்பிக்க அதை கவனிக்காத நடுவர் நோ பால் தரமறுத்துவிட்டார்.

இந்நிலையில் வங்கதேச வீரர்களுக்கு தண்ணீர் அளிக்க சென்ற மாற்றுவீரர் இலங்கை கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட மோதல் அதிகமாகி ஒருவரை ஒருவர் தள்ளிக்கொள்ள வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் ஹல் அசேன் உடைமாற்றிடும் அறையிலிருந்து வெளியே வந்து மைதானத்தில் நின்று வீரர்களை விளையாடாமல் களத்திலிருந்து வெளியே வரச்சொல்லி ஒரு புறம் கத்திக்கொண்டிருந்த அதேவேளையில் மற்றொருபுறம் கோபத்தின் உச்சத்தில் வங்கதேச அணியினரால் உடைமாற்றிடும் அறை கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

வங்கதேச அணிவீரர்கள் சிலர் உடைமாற்று அறை கண்ணாடி உடைத்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.நேற்றைய போட்டியின் போது முதலில் சென்று வங்கதேச வீரர்கள் தான் இலங்கை அணியினரிடம் வம்பிழுத்துள்ளனர். இவை அனைத்தும் இப்போது ஐசிசி கவுன்சிலிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது.

தங்கள் அணிவீரர்களால் உடைக்கப்பட்ட கண்ணாடிக்கான இழப்பை வங்கதேசம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துவிட்ட போதிலும் ஐசிசி தரப்பு ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட வங்கதேச அணிவீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.இந்நிலையில் வரும் 18ம் தேதி கொழும்பிலுள்ள பிரேமதாஸா மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரிட்சை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

bangladesh1

Advertisement